Breaking News

33 வருடங்களின் பின் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்ட ஆலயம் !

 


கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர், சுமார் 33 வருடங்களுக்கு பின்னர்  யாழ்ப்பாணம் கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

கட்டுவன் காசியம்மாள் அம்மன் ஆலய தேவஸ்தானத்தினரால் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா  மகேஸ்வரனிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விஜயகலா மகேஸ்வரன் எடுத்த முயற்சியின் பயனாக குறித்த ஆலயத்தினை சென்று பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், நேற்றையதினம் மாலை இராணுவத்தினரின்  அனுமதியுடன் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள  குறித்த ஆலயத்தினை சென்று  பார்வையிட்டதோடு ஆலயத்தில்  பூஜை வழிபாடுகளும்  குருமார்களினால் முன்னெடுக்கப்பட்டது.