Breaking News

லிட்ரோ நிறுவன எரிவாயு விலையேற்றம் தொடர்பிலான தீர்மானம் இன்று!

 


நாட்டில் உள்ள இரண்டு பெரிய எரிவாயு விநியோகஸ்தர்களில் ஒன்றான லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பை இனறையதினம்  புதன்கிழமை வெளியிடவுள்ளது.

அதன்படி, இன்று  பிற்பகல் 02.30 மணிக்கு கொழும்பில் உள்ள லிட்ரோ தலைமை அலுவலகத்தில் இது தொடர்பான அறிவிப்பை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் வெளியிடவுள்ளார்.

விலை திருத்த சூத்திரத்தின் அடிப்படையில் விலை திருத்தம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் நிலவும் தற்போதைய விலையை கருத்தில் கொண்டு, இந்த விலை திருத்தத்தின் போது, உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.