Breaking News

பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை குறித்த அறிவிப்பு!

 


பாடசாலைகளுக்கான 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நவம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமானது.

இதற்கமைய மூன்றாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி நிறைவடையும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டப் பாடசாலைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி முதல் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.