Breaking News

அரசை சினங் கொள்ள வைத்த கூட்டமைப்பின் புதுடில்லி பயணம்


தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் இந்­திய விஜ­ய­மா­னது,
மூன்று விடயங்­களைத் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. முத­லா­வது விடயம், இந்­தி­யாவின் புதிய அர­சாங்கம், இந்­தி­யா­வினால் 27 வரு­டங்­க­ளுக்கு முன்னர் முன்வைத்த, இலங்­கையின் 13 ஆவது அர­சியல் திருத்தச் சட்­டத்தின் கீழ் அதி­கா­ரங்­களைப் பர­வ­லாக்கி, சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு ஓர் அர­சியல் தீர்வை ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பதில் அக்­க­றையும் ஆர்­வமும் கொண்­டி­ருக்­கின்­றது. 

இரண்­டா­வது விடயம், இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தின் கீழ் கொண்டு வரப்­பட்ட 13 ஆவது அர­சியல் திருத்தச் சட்­ட­மா­னது, தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு முழு­மை­யான தீர்வைத் தரப்­போ­வ­தில்லை என்ற திருப்தி இல்­லாத போதிலும், யுத்­தத்­திற்குப் பின்னர் நாளுக்கு நாள் நெருக்­க­டிகள் அதி­க­ரித்து, மோச­மாகிச் செல்­கின்ற நிலை­மையைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக 13 ஆவது திருத்­தத்தின் அடிப்­ப­டையில், சற்று அதற்கு அப்பால் செல்­லத்­தக்க ஒரு தீர்வை ஏற்­றுக்­கொள்­வ­தற்கு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தயா­ராக இருக்­கின்­றது. 

மூன்­றா­வது விடயம், நீண்­ட­கா­ல­மாக, புரை­யோ­டிப்­போ­யுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந் த­ர­மாக இல்­லா­விட்­டாலும், தற்­கா­லி­க­மா­க­வா­வது ஓர் அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கு­ரிய சந்­தர்ப்­பமும் வாய்ப்பும் ஏற்­பட்­டி­ருக்­கின்ற போதிலும், அத்­த­கைய தீர்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் தயா­ராக இல்லை. 

பலராலும் வலி­யு­றுத்­தப்­ப­டு­வதைப் போன்ற அதி­காரப் பர­வ­லாக்­க­லுடன் கூடிய அர­சியல் தீர்­வொன்றை சிறு­பான்­மை­யி­ன­ருக்கு இந்த நாட்டில் வழங்கப் போவ­தில்லை. இன, சமூக அடை­யா­ள­மற்­ற­வர்­க­ளாக பௌத்த இலங்­கை­யர்கள் என்ற ஒற்றை அடை­யா­ளத்தின் கீழ் சிறு­பான்­மை­யினர் வர­வேண்டும் என்ற மறை­மு­க­மான நிகழ்ச்சி நிர­லையே இலங்கை அர­சாங்கம் தொடர்ந்து முன்­னெ­டுக்கப் போகின்­றது என்ற மூன்று விட­யங்கள் தெளி­வா­கி­யி­ருக்­கின்­றன. 

இந்­திய சந்­திப்பும் இலங்கை அர­சாங்­கத்தின் ஏமாற்­றமும் 

இந்­தி­யாவின் அண்­மைய பொதுத் தேர்­தலில் அந்த நாட்டின் பாரம்­ப­ரிய அர­சியல் செல்­வாக்கு மிக்க காங்­கிரஸ் கட்சி படு­தோல்­வி­ய­டைந்­தது. இந்தத் தேர்­தலில் அங்கு ஓர் ஆட்சி மாற்றம் ஏற்­படும் என்ற உறு­தி­யான எதிர்­பா­ர்ப்பு நில­வி­யது. 

அதற்­கான அர­சியல் சூழ்­நி­லைகள் கனிந்­தி­ருந்­தமை தெளி­வாகத் தெரிந்­தி­ருந்­தது. ஆயினும் பார­தத் தின் பழம்­பெரும் கட்­சியும், வர­லாற்றுப் புகழ் மிக்க பல அர­சியல் தலை­வர்­களைக் கொண்­டி­ருந்­த­து­மான காங்­கிரஸ் கட்சி பல இடங்­களில் கட்டுப் பணத்தை இழக்கும் அள­வுக்கு இந்தத் தேர்தல் தோல்வி மோச­மா­கி­யி­ருந்­தது. 

அத்­த­கைய ஆட்சி மாற்­றத்தின் பின்னர் அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­யுள்ள பா.ஜ.க. அர­ சாங்­கத்தின் அழைப்­பை­யேற்று, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினர் புது­டில்லி சென்­றி­ருந்­தனர். மேலோட்­ட­மான பார்­வையில் இலங்­கைக் கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் நீண்ட கால­மாக நிலவி வரு­கின்ற ஓர் அர­சியல் உறவின் பின்­ன­ணியில் – போரினால் பாதிக்­கப்­பட்டு போர் முடி­வுக்கு வந்த பின்பும், மீட்­சி­யின்றி தவித்துக் கொண்­டி­ருக்­கின்ற சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் தலை­வர்­க­ளு­ட­னான ஓர் அறி­முக சந்­திப்­புக்­கான அழைப்­பாக புதிய இந்­திய அரசின் இந்த அழைப்பை நோக்­கலாம். 

எனினும், யுத்த காலத்­தி­லும்­சரி, அதற்கு முன்­ன­ரான காலப்­ப­கு­தி­யி­லும்­சரி, யுத்தம் முடி­வ­டைந்த பின்­ன­ரும்­சரி, இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் - ஓர் இரண்­டறக் கலந்த நிலை­மை­யி­லான கொள்­கையைக் கொண்­டுள்ள இந்­தி­யாவின் புதிய அர­சாங்­கத்­தி­ன­ருக்கு, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பைச் சந்­திக்க வேண்­டிய ஓர் அர­சியல் தேவை இருக்­கின்­றது. 

அதற்­கா­கவே கூட்­ட­மைப்பைச் சந்­திப்­ப­தற்கு புது­டில்லி அழைப்பு விடுத்­தி­ருந்­தது என்று கரு­து­வ­திலும் தவ­றி­ருக்க முடி­யாது. இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னையில் இந்­தியா நீண்­ட­கா­ல­மா­கவே ஈடு­பாடு காட்டி வந்­துள்­ளது. பல சந்­தர்ப்­பங்­களில் அது நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் இனப்­பி­ரச்­சினை விவ­கா­ரத்தில் தலை­யிட்டுச் செயற்­பட்­டி­ருக்­கின்­றது. 

குறிப்­பாகச் சொல்­லப்­போனால், கறுப்பு ஜுலை கல­வரம் என்­ற­ழைக்­கப்­ப­டு­கின்ற 1983 ஆம் ஆண்டு இனக்­க­ல­வ­ரத்தின் போது இந்­தியா நேர­டி­யாகத் தலை­யிட்டு, பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களை, இலங்­கையின் பாரம்­ப­ரிய தமிழ்ப்­பி­ர­தே­ச­மா­கிய யாழ்ப்­பா­ணத்­திற்கும், தனது மாநி­லங்­களில் ஒன்­றா­கிய தமிழ்­நாட்­டுக்கும், அப­ய­ம­ளிப்­ப­தற்­காகக் கப்­பல்கள் மூல­மாக அழைத்துச் செல்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தது. 

இலங்கை அர­சாங்­கத்தின் வேண்­டு­கோ­ளை­யேற்று இந்­தியா அப்­போது இந்த நட­வ­டிக்­கையை மேற்­கொள்­ள­வில்லை. கறுப்பு ஜுலை கல­வ­ரத்தின் மோச­மான (மிரு­கத்­த­ன­மா­னது என்று கூட வர்­ணிக்­கப்­ப­டு­கின்­றது) நிலை­மையை உணர்ந்தும், பாதிக்­கப்­பட்ட மக்கள் தரப்­பி­லான வேண்­டு­கோளை ஏற்றும் அப்­போ­தைய இந்­திய அரசு தானா­கவே பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு உதவ முன்­வந்­தி­ருந்­தது. 

அதனைத் தொடர்ந்து இலங்கைக் குடி­மக்­களின் ஒரு­சா­ரா­ரா­கிய தமிழ் மக்­களின் சார்பில் இலங்கை அர­சாங்­கத்­துடன், இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணும் நோக்கில் ஓர் ஒப்­பந்­தத்­தையே செய்­தி­ருந்­தது. இலங்கை இந்­திய ஒப்­பந்தம் என்று வர­லாற்றில் கொட்டை எழுத்­துக்­களில் பதி­வா­கி­யுள்ள அந்த ஒப்­பந்­தத்தின் விளை­வா­கவே, இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் என்ற மிகவும் முக்­கி­ய­மான ஒரு திருத்தச் சட்­டமே கொண்டு வரப்­பட்­டது. 

கடந்த 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்­தை­யடுத்து, ஏற்­ப­டுத்­தப்­பட்ட அந்த 13 ஆவது அர­சி ய­லமைப்புத் திருத்தச் சட்டம் பற்றி, ஒரு கால் நூற்­றாண்­டுக்கும் மேற்­பட்ட கால­மா­கிய இப்­போதும் கார­சா­ர­மாக விவா­திக்­கப்­ப­டு­கின்­றது. இலங்கை அர­சி­யலமைப்பை பொறுத்­த­மட்டில் தொண்­டையில் சிக்­கிய ஒரு முள்­ளா­கவே பேரி­ன­வா­தி­க­ளுக்கு இந்த 13 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தச் சட்டம் இப்­போதும் அமைந்­தி­ருக்­கின்­றது. 

எனவே, இத்­த­கைய ஒரு பல­மான அர­சியல் பின்­ன­ணியில், இந்­தி­யாவில் புதி­தாக ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­யுள்ள பா.ஜ.க. அர­சாங்கம் தமிழ்த்தேசிய கூட்­ட­மைப்­ பி­னரை அழைத்து பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருப்­பதில் வியப்­ப­தற்கோ, கோப­தா­பப்­ப­டு­வ­தற்கோ ஒன்­று­மில்லை என்­றுதான் கூற வேண்டும். 

ஆனால், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு விடுக்­கப்­பட்ட இந்­தியாவின் இந்த அழைப்பு இலங்கை அர­சாங்­க த்தைச் சீற்­ற­ம­டையச் செய்­தி­ருக்கின்­றது. குறிப்­பாக இலங்கைஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச மிகவும் அப்செட் ஆகி­யுள்ளார் என்று தக­வல்கள் வெளியா­கி­யி­ருக்­கின்­றன. இந்­திய அரசுக்கும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­ன­ருக்கும் இடையில் இடம்­பெற்ற இந்தச் சந்­திப்பு -பேச்­சு­வார்த்­தைகள் குறித்து தானா­கவே கருத்து வெளி­யிட்­டுள்ளார். 

சலிப்பும் சீற்­றமும்

'சம்­பந்­தனும், அவ­ரு­டைய கட்­சி­யி­னரும் எங்கு சென்­றாலும் இறு­தியில் என்­னி­டம் வர­வேண்டும். என்­னிடம் வரா­விட்டால் அவர்­களால் தீர்­வுகள் குறித்து பேச முடி­யாது' என்று அவர் கூறி­யுள்ளார். இந்தக் கருத்தை அவர் நேர­டி­யாகக் கூறாமல், தனது தூதுவர் ஒரு­வரின் ஊடா­கவே தெரி­வித்­தி­ருக்­கின்றார் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

இந்­தி­யா­வுக்குச் சென்று பேச்­சுக்கள் நடத்­து­வ­தனால் பய­னில்லை. என்­னி­டம்தான் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு பற்றி பேச­வேண்டும். பிரச்­சி­னைக்குத் தீர்வு காண வேண்­டு­மானால், என்­னி­டமே வர­வேண்டும். நான் கூறு­கின்­ற­படி செய்ய வேண்டும். நடந்து கொள்ள வேண்டும் என்ற அதி­காரத் தோரணை அவ­ரு­டைய கருத்தில் தொக்கி நிற்­கின்­றது. 

அவ­ரு­டைய இந்தக் கூற்று ஒரு வகையில் - நிறை­வேற்று அதி­கா­ரத்­தையும். பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலத்­தையும் கொண்­டி­ருப்­ப­துடன் மட்­டு­மல்­லாமல், உல­கத்­திற்கே முன்­னோ­டி­யாக விடு­த­லைப்­பு­லி­களின் பயங்­க­ர­வா­தத்தைத் தோற்­க­டித்து வெல்ல முடி­யாத ஒரு யுத்­தத்தில் வெற்றி வாகை சூடி, அசைக்க முடி­யாத ஓர் இரா­ணுவ பலத் தைக் கொண்­டுள்ள தன்­னையும் மீறி, வெளிச் சக்தி ஒன்­றிடம் கூட்­ட­மைப்­பினர் துணிந்து சென்­றி­ருக்­கின்­றார்­களே என்ற ஆற்­றா­மையை வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருப்­பதைக் காண முடி­கின்­றது. 

அது மட்­டு­மல்­லாமல், தன்னைக் கேளா மல், தன்­னு­டைய அனு­ம­தியைப் பெறாமல் அல்­லது இந்த நாட்டின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என்ற கார­ணத்­தினால், பாராளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்தைப் பெறாமல் விட்­டேற்­றி­யாகச் சென்று இந்­திய அர­சுடன் பேச்­சுக்கள் நடத்­தி­யி­ருக்­கின்­றார்­களே என்ற அர­சியல் ரீதி­யான எரிச்­சலும், சலிப்பும் அவ­ரு­டைய கூற்றில் வெளிப்­பட்­டி­ருப்­ப­தையும் உணர முடி­கின்­றது. 

இந்த உணர்வு வெளிப்­பா­டா­னது, ஒரு வகையில் அர­சியல் கோமா­ளித்­த­ன­மா­கவே அர­சியல் விமர்­ச­கர்­க­ளினால் நோக்­கப்­ப­டு­கின்­றது. நிறை­வேற்று அதி­காரம் உட்­பட ஜன­நா­யக ரீதி­யான பெரும்­பான்மை பலம் உட்­பட வலு­வான அர­சியல் அதி­கா­ரங்­களைக் கொண்­டுள்ள ஒரு நிலையில் இனப்­பி­ ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்கு, ஆக்­க­ பூர்­வ­மான எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யையும் எடுக்­காமல், அதனைப் பின்­போட்டு, தட்­டிக்­க­ழிப்­ப­தற்கே ஜனா­தி­ப­தியும், அவ­ரு­டைய தலை­மை­யி­லான இலங்கை அர­ சாங்­கமும் முயன்று வரு­கின்­றன. 

அது மட்­டு­மல்­லாமல், பூனைக்கு விளை­யாட்டு, எலிக்கு சீவன் போகின்­றது என்­ற­து­போல, யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சத்­தையும், அங்­குள்ள மக்­களின் வாழ்க்­கை­ யையும் மறு­சீ­ர­மைப்­ப­தற்கு நேர்­மை­யா­கவும், இத­ய­சுத்­தி­யு­டனும் நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்குப் பதி­லாக, இந்த அர­சாங்கம் அந்தப் பிர­தே­சத்தை முழு­மை­யாக இரா­ணுவ மய­மாக்கி, ஓர் இரும்புப் பிடிக்குள் மக்­களை ஆழ்த்தி வைத்­தி­ருக்­கின்றது. 

சுதந்­தி­ர­மான சிவில் நட­வ­டிக்­கை­க­ளுக்கும் சிவில் நிர்­வா­கத்­திற்கும் இட­ம­ளிக்­காமல், இரா­ணுவ மேலா­திக்க நிர்­வாகக் கட்­ட­மைப்பின் கீழ் அங்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான கடந்த ஐந்து வரு­டங்­களும் அர­சாங்­கத்தின் இந்த முயற்­சி­யையும், செயற்­பா­டு­க­ளையும் மிகத் தெளி­வாக வெளிச்சம் போட்டு காட்­டி­யி­ருக்­கின்­றன. 

இந்த நிலை­மையில் புரை­யோடிப் போயுள்ள இனப்­பி­ரச்­சி­னை­யினால் பாதிக்­கப்­பட்டு, பின்னர் மோச­மான ஒரு யுத்­தப்­பா­திப்­புக்கு ஆளாகி, வாழ்க்­கையின் விளிம்பில் வந்து நிற்­கின்ற ஒரு சமூ­கமும், அதன் தலை­வர்­களும், பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு சொந்த நாட்டில் நம்­பிக்கை மிகுந்த வழியைக் காணா­விட்டால், சந்­தர்ப்பம் கிடைக்­கின்ற இடங்­களை நோக்கி, வாய்ப்­புக்­களை நோக்கிச் செல்­லாமல் வேறு என்ன செய்­வார்கள்? 

கோமா­ளித்­தன அர­சி­யலின் கீழ்............

இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­காக அமைக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்ற பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வர­வேண்டும். அங்கு வரா­விட்டால் பிரச்­சி­னைக்கு ஒரு­போதும் தீர்வு காண முடியாது என்று அரசு பிடி­வா­த­மாக இருக்­கின்­றது. இந்தத் தெரி­வுக்­கு­ழுவின் மூலம் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்­பி க்­கையைத் தமிழர் தரப்­பி­ன­ருக்கு அர­சாங்­கத்­தினால் ஏற்­ப­டுத்த முடி­ய­வில்லை. 

அந்தத் தெரி­வுக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் குறித்து அர­சாங்­கமும், அதன் அமைச்­சர்­களும், அர சின் பங்­காளிக் கட்­சி­களும் தொடர்ச்­சி­யாகக் கூறி வரு­கின்ற கருத்­துக்கள் தமிழர் தரப்பைப் பொறுத்­த­மட்டில், தமிழ் மக்­க­ளையும் அவர்­களின் அர­சியல் தலை­வர்­க­ளையும், அர­சியல் தீர்வுக்கு­ரிய இணக்­கப்­பாட்­டிற்­கான ஒரு கள­மாக அல்­லாமல், ஓர் அர­சியல் பொறி­யா­கவே நோக்கச் செய்­தி­ருக்­கின்­றது. 

இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான ஓர் அர­சியல் தீர்வைக் காண்­கின்ற வல்­ல­மையையும் வாய்ப்­பையும் இலங்கை அர­சாங்­கமே கொண்­ டி­ருக்­கின்­றது. இதில் மாற்று கருத்­துக்கு இட­மில்லை. ஆனால், அந்த அர­சியல் வல்­ல­மை­யையும் வாய்ப்­பையும் சரி­யான முறையில் பயன்­ப­டுத்தி நாட்டில் நிரந்­தர அமை­தி­யையும் சுபிட்­சத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சிக்­காமல், சிறு­பான்மை இன மக்­கள் பால், அரசு முரட்டுத் தன­மான அர­சியல் நடத்­து­வ­தா­கவே விமர்­ச­கர்­களும், வெளி­யாரும் நோக்­கு­கின்­றார்கள். இதனை அவர்கள் கோமா­ளித்­த­ன­மான அர­சி­ய­லாகப் பார்க்­கின்­றார்கள். 

ஆனால், பேரி­ன­வாத சிந்­த­னையில் மூழ்­கி­யுள்ள இலங்கை அர­சாங்கம் ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற தாரக மந்­தி­ரத்தின் கீழ், ஒற்­றை­ யாட்சி கொண்ட, ஓரின மக்கள் வாழ்கின்ற நாடாக இந்த நாட்டை மாற்றி அமைப்­ப­தற்­கான முயற்­சி­க­ளையே மேற்­கொண்டு வரு­கின்­றது. 

பல்­லின மக்­க­ளையும் பல சமூ­கங்­க­ளையும் இந்த நாடு கொண்­டி­ருக்­கின்ற போதி லும், பேரின மக்­க­ளா­கிய பௌத்­தத்தைப் பின்­பற்­று­கின்ற சிங்­கள மக்­க­ளுக்கே அனைத்­திலும் முன்­னு­ரிமை, ஏனை­யோ­ரையும் பௌத்­தர்­க­ளாக்கி, இந்த நாட்டை ஓரினம் ஒரு சமூகம் கொண்ட நாடாக உரு­வாக்­கி­விட வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் காரி­யங்­க­ளையே முன்­னெ­டுத்து வரு­கின்­றது. 

யுத்­தத்தின் பின்னர், யுத்­தத்­தினால் பாதிக்­ கப்­பட்ட பிர­தே­சங்­களில் மீள்­கு­டி­யேற்றம் மற்றும் புனர்­நிர்­மாணம், புனர்­வாழ்வு, மீள்­கட்­ட­மைப்பு போன்ற நட­வ­டிக்­கை­களின் கீழ், தேசிய பாது­காப்பு என்ற போர்­வையில், சிங்­கள மக்­க­ளையும் சிங்­க­ள­வர்­களைப் பெரும் பான்­மை­யாகக் கொண்ட இரா­ணு­வத்­தி­ன­ரையும் அந்தப் பகு­தி­களில் வலிந்து நிரந்­த­ர­மாகக் குடி­யேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. 

சிங்­கள, தமிழ், முஸ்லிம் என்று மூவின மக்­களும் நாடு முழு­வதும் பரந்து கலந்து வாழ வேண்டும் என்­பதில் அரசு தீவி­ர­மாக இருக்­கின்­றது. இதன் மூலம் இனம் மற்றும் சமூக ரீதி­யான பாரம்­ப­ரிய பிர­தேசம், பாரம்­ப­ரிய தாயகப் பிர­தேசம் என்ற – தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் தாயகப் பிர­தே­சங்­களை அடி­யோடு இல்­லாமல் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முடுக்­கி­வி­டப்­பட்­டி­ருக்­கின்­றன. 

யுத்தம் நடை­பெற்ற வடக்கு கிழக்குப் பிர­தே­சங்­க­ளிலும், இனக்­கு­ழு­மங்கள் அல்­லது சமூ­க­மாக தமிழ் மற்றும் முஸ்லிம் சிறு­ பான்மை இன மக்கள் செறிந்து வாழ்­கின்ற பிர­தே­சங்­களில், இடங்­களில் பெரும்­பான்மை இன மக்­களைக் குடி­யேற்­று­வ­தையும், அந்தப் பகு­தி­களில் சிங்­கள மக்­களைத் தொழில் செய்வ­தற்கு ஊக்­கு­விப்­ப­தையும் தெளி­வாகக் காணலாம். 

அதே­நே­ரத்தில் அந்தப் பகு­தி­க ளில் பௌத்த மதத்தை நிலை ­நி­றுத்­து­வ­த ற்­காக, பௌத்­தர்கள் இருந்­தாலும், இல்­லா­விட்­டாலும் அந்தப் பகு­தி­களில் ஏனைய மதம் சார்ந்த வணக்­கத்­த­லங்கள் இருக்­கின்ற இடங்­க­ளிலும், வச­தி­யான ஏனைய இடங்­க­ளிலும் பௌத்த விகா­ரைகள் அமைக்­க­ப்பட்­டி­ருப்­ப­தையும், அமைக்­கப்­ப­டு­வ­தையும் புத்தர் சிலைகள் நிறு­வப்­பட்­டி­ருப்­ப­தையும், நிறு­வப்­ப­டு­வ­தையும் தாரா­ள­மாகக் காணலாம். 

இந்தப் பின்­ன­ணி­யி­லேயே, இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசாங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை அழைத்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றது. இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படு த்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அடித்தளமாகக் கொண்டு, அதிகாரங்க ளைப் பரவலாக்கி, அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டும் என்று இந்திய அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றது. 

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வடமா காண சபையின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள போதிலும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நல்வாழ்வுக்கான நட வடிக்கைகளை அதிகாரபூர்வமாக மேற்கொள்ள முடியாமல் அதிகாரமற்ற சபையாக அதனைத் தொடர்ந்து கொண்டு நடத்த முடியாது. 

ஆகவே, 13 ஆம் திருத்தச் சட்டத்திற்க மைவாக அதற்கு அப்பால் சென்று ஒரு தீர்வைக் காண்பதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும், உதவ வேண்டும் என கோரியிருக்கின்றனர். இதன் மூலம் சமத்துவம் மிக்க அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய தமிழர் தாயகப் பிரதேசங்களை நிர்வகிக்கத்தக்க, நிரந்தர மான ஓர் அரசியல் தீர்வை அடைவதற்கு ஓர் ஆரம்ப நடவடிக்கையாக அல்லது ஓர் இடைக்கால தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு தீர்வைக் காண்பதற்கு அவர்கள் முயற்சித்திருக்கின்றார்கள். 

விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்ற ஓர் அரசியல் நிலைப்பாடு நிலவுகின்ற இலங்கையில், இந்தியாவின் புதிய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு எந்த வகையில் தீர்வைக் காணப் போகின்றது என்பதையும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடம் புதுடில்லி வெளிப்படுத்தியுள்ள இலங்கை தொடர்பான அரசியல் நிலைப்பாட்டை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப் போகின்றது என்பதை யும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.