அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்தால் மைத்திரிக்கு ஆதரவு வழங்க முடியாது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்தால் அவருக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என அக்கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலை திட்டத்தில் மக்களுக்கு நலன்களை ஏற்படுத்தக் கூடிய அனைத்து திட்டங்களுக்கும் ஆதரவளிக்க விரும்புகின்றோம்.
மேலும் ஒவ்வொரு திட்டமாக சீர்தூக்கிப் பார்த்து அதன் நன்மைகளின் அடிப்படையில் ஆதரவளிக்கப்படும். எனினும், சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை பலவந்தமான அடிப்படையில் கைப்பற்றிக் கொள்ள முயற்சித்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.அவ்வாறான ஓர் பின்னணியில் புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவின் நூறு நாள் திட்டத்திற்கு ஆதரவும் அளிக்கப்படமாட்டாது.








