Breaking News

முன்னாள் அமைச்சர் பசில் உட்பட மூவர் கைது!

பொலிஸ் பாரிய நிதிமோசடி குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரைக் கடுவெல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பசில் ராஜபக்ஸவின் சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா தெரிவித்தார். 

முன்னாள் அமைச்சருடன் மேலும் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டார். இதுதொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்காக பொலிஸார் B அறிக்கையை தயாரித்து வருவதாகவும் சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா கூறினார்