Breaking News

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த புலித்தேவன் மனைவி அழைப்பு

தமிழினப்படுகொலை விவகாரத்தில் இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலக பணிப்பாளர் புலித்தேவனின் மனைவி அழைப்பு விடுத்துள்ளார்.

இறுதிக்கட்டப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள், தளபதிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தது தொடர்பில் ஐ.நாவின் நேரடிச் சாட்சியங்களாக மாறியுள்ள ஒருவராக புலத்தேவனின் மனைவியிருக்கின்றார்.

இந்நிலையில் நாடுகடந்த அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்துப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு இந்த அழைப்பினை இவர் விடுத்துள்ளார்.

சிங்கள அரசினது இனஅழிப்பு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்க வேண்டி முன்னெடுக்கப்படுகின்ற இந்த கையெழுத்துப் போராட்டத்தில் அனைவரும் பங்கெடுத்து ஒத்துழைப்பூட்டு வலுவூட்ட வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.