Breaking News

பாதுகாப்பு சிக்கலை அடுத்து முகநூலில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் சுமந்திரன்

கடந்த வாரங்களில் பிரச்சாரத்திற்கு சென்ற சுமந்திரனை சூழ்ந்து கொண்ட இளைஞர்கள் காரசாரமாக கேள்விகளை கேட்டு
தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கிய நிலையில் மாலைநேர சந்திப்புக்களை தவிர்த்து வந்த முன்னாள் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் சின்னக்கதிர்காமர் என செல்லமாக அழைக்கப்படுபவருமான எம்.ஏ.சுமந்திரன் தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு நேரில் செல்வதில் தனிநபர் பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொண்டு தனது பிரச்சாரப் பணிகளை முகநூல் வாயிலாக ஆரம்பித்திருக்கிறார்.

வாக்காளர்கள் தங்கள் கேள்விகள்,ஐயங்கள்,த.தே.கூட்டமைப்பின் சாணக்கிய நகர்வுகள்,ராஜதந்திர விடயங்கள் தொடர்பாக விளக்கமில்லாதவர் தொலைபேசி வாயிலாகவோ அவரது முகநூலிற்கோ சென்று உங்கள் ஆதரவையும், அரசியல் கேள்விகளையும் கேட்டு அரசியல் தெளிவை பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தொலைபேசி இல-021 3005055

முகநூலில் தொடர


தொடர்புடைய முன்னைய செய்திகளை பார்வையிட