Breaking News

கூட்டமைப்பின் கப­டத்­தன அர­சியல் தமி­ழர்கள் மத்­தியில் இனிமேல் பலிக்காது – செல்­லையா இரா­சையா

தேர்தல் காலங்­களில் அழகு தமிழில் பேசி தமிழ் மக்­களின் வாக்­கு­களை கப­டத்­த­ன­மாகப் பெற்று அர­சியல் நடத்தும் காலம் இனி­மேலும் தமிழ் மக்கள் மத்­தியில் பலிக்­காது என தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் அம்­பாறை மாவட்ட அமைப்­பாளர் செல்­லையா இரா­சையா குறிப்­பிட் டார்.


தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் ஆத­ர­வா­ளர்­க­ளு­ட­னான சந்­ திப்பு ஆலை­ய­டி­வேம்பு பிர­தே­சத் தில் இடம்­பெற்­றது. அதன்போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து குறிப்­பி­டு­கையில்,

பல­வ­ரு­டங்­க­ளாக அம்­பாறை மாவட்ட தமிழ் மக்­களைச் சீர­ழித்த அர­சியல் தலை­மையை எமது மக்கள் உணரத் தொடங்கி விட்­டனர். ஆண்­டுக்­கொ­ரு­த­டவை, ஆவ­ணிக்­கொரு தடவை நுனிப்புல் மேய்­வது போல் இங்கு வந்து தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை ஒரு சில­ரிடம் கேட்­ட­றிந்து கொள்­வதும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு கைவந்த கலை­யாகும்.

அநே­க­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் உள்ள தலை­வர்கள் தமது சொந்த உழைப்பில் இருந்து மக்­க­ளுக்கு எந்­த­வி­த­மான உத­வியும் செய்­ய­வில்லை. இதனை இன்று மக்கள் சீர்­தூக்கிப் பார்க்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் அழ­காக தமி­ழர்­களின் பாதிப்பு நிகழ்வு பற்றி தெளி­வு­ப­டுத்­து­வார்கள். அந்த விஞ்­ஞா­ப­னப்­படி இன்று வரை நடந்­த­தில்லை. அல்­லது அதனைப் பின்­பற்­று­வ­தில்லை.

இவர்­களின் அழகு தமிழ் வார்த்­தை­களை நம்பி வாக்­க­ளித்த எமது தமிழ் மக்கள் மிகவும் நொந்­தது மட்­டு­மன்றி, அவர்­க­ளு­டைய நில புலன்­களை யும், கிரா­மங்­க­ளையும், உடமை­க­ளையும், இழந்து ஏழ்­மை­யாக வாழ்­வது மட்டுமே இன்று மீதமாக வுள்ளது. இதை சீர்தூக்கிப் பார்த்துத்தான் நாங்கள் அரசியல் மாற்றம் தேவை என்கிறோம்.