Breaking News

கனடாவிலிருந்து ஒரு கோடிரூபாய்! சுருட்டிக்கொண்டாரா சுமந்திரன்(காணொளி இணைப்பு)

வடமாகாண சபை தேர்தலுக்கு மட்டும் நாங்கள்
கனடாவிலிருந்து ஒரு கோடிரூபா காசு வழங்கியிருந்தோம், இதே போன்று ஏனைய நாடுகளிலிருந்து எத்தனை கோடி ரூபாய்??? இந்த தேர்தலுக்கு எத்தனை கோடி கிடைக்கும்? அதனை கட்சியில் யார் யாருக்கிடையில் பங்கீடு என்பன தொடர்பான செய்திகள் வந்துள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த நிதி கிடைத்தபோதும் தமிழரசுகட்சியை சேர்ந்த கொழும்பு வட்டத்துக்குள்ளேயே அவை பங்கிடப்பட்டதா? அல்லது ஆளாளுக்கு பங்குபோட்டுக்கொண்டார்களா? என்பதை தெழிவுபடுத்த வேண்டும். உண்மையாகவே கடந்த 5ஆண்டுகள் நேர்மையாக மக்கழுக்கு வழங்கிய வாக்குறுதிகளை செவ்வனே செய்தால் எதற்கு கோடிக்கணக்கில் கொட்டித் தீர்க்க வேண்டும்.

இதுவரை காலமும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமக்கு கிடைத்த வெளிநாட்டு நிதியுதவி மூலமாக ஒருவருக்கேனும் உதவினார்களா இந்த நிதியும் த.தே.கூட்டமைப்பின் வெளிநாட்டு தொடர்பாடல் பொறுப்பாளர் எம்.ஏ.சுமந்திரனிடமே கையளிக்கப்பட்டதா? தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும்போது மக்களுக்கு பதிலளித்தே ஆகவேண்டும். கணக்கு காட்டுவரா சுமந்திரன்?