Breaking News

இடம் தராவிட்டால் வேறுகட்சியில் போட்டியிடுவேன் : அனந்தி

“நான் அரசியலுக்கு விரும்பி வந்த ஒரு பெண்ணல்ல என்னை அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லி தமிழரசுக்கட்சியினர் கொண்டுவந்து விட்டு இப்போது நட்டாற்றில் கொண்டு வந்து விட்டதுபோல் இப்போது ஒரு உணர்வு க்குள் இருக்கின்றறேன்” என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட விரும்புவதாகவும், மக்களின் விருப்பமும் அதுவாகவே உள்ளதெனவும்  அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால், தான் வேறு கட்சியில் போட்டியிட தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.


குறிப்பு-
               நேற்றையதினம் எம்மால் இணைக்கப்பட்ட ஒலிவடிவம் JVP செய்தி தளத்தினுடையது. அதிலுள்ள புகைப்படங்களை நாம் உற்றுநோக்கவில்லை ஆதலாம் வாசகர்கள் சிலருக்கு ஏற்பட்ட மனவருத்தத்திற்கு மன்னிப்பு கோருவதோடு. 

எமது தளத்திற்கு தேசியத்திற்காக போராடும் எவரையும் பிரச்சார காள்ப்புணர்வுக்கு உட்படுத்தும் நோக்கம் இல்லை என்பதையும் அறியத்தருகின்றோம். அத்தோடு குறித்த காணொளி வேண்டுமென்றே அனந்தியை புளட் கட்சியோடு இணைத்து சித்தரிக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.