Breaking News

விரைவில் புதிய அரசியலமைப்பு! என்கிறார் ஜனாதிபதி

நாட்டில் விரைவில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்த புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நாட்டில் சுதந்­திரம், ஜன­நா­யகம், மனித உரி­ மை­களை பலப்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

மக்கள் எனக்கு வழங்­கிய அதி­கா­ரத்தை மக்­க­ளுக்­காக சரி­யான முறையில் பயன்­ப­டுத்­துவேன் என்றும் ஜனா­தி­பதி சிறி­சேன சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­வ­தற்­காக அமெ­ரிக்­காவின் நியூயோர்க் சென்­றுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நியூயோர்க் பௌத்த விஹா­ரையில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற நிகழ்வில் கலந்­து­கொண்டு

உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். இந்த நிகழ்­வுக்கு நியூயோர்க்கில் வசிக்கும் இலங்­கை­யர்கள் வருகை தந்­தி­ருந்­தனர். இதன்­போது அமெ­ரிக்க வாழ் இலங்­கை­யர்­க­ளுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுமு­க­மான கலந்­து­ரை­யா­டல்­க­ளிலும் ஈடு­பட்டார்.

நிகழ்வில் ஜனா­தி­பதி தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்

நாட்­டுக்கு எதிர்­கா­லத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இந்த புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நாட்டில் சுதந்­திரம் ஜன­நா­யகம் மனித உரி­மை­களை பலப்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­படும்.

மேலும் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்­கான சர்­வ­தே­சத்­திடம் இருந்து பாரிய ஆத­ரவு கிடைத்­துள்­ளது. மக்கள் எனக்கு வழங்­கிய அதி­கா­ரத்தை மக்­க­ளுக்­காக சரி­யான முறையில் பயன்­ப­டுத்­துவேன் என்றார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் புதன்­கி­ழமை இலங்­கையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் உரை­யாற்­ற­வுள்ளார். கடந்த சனிக்­கி­ழமை ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாய­கத்தை சந்­தித்­தி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் ஊடாக சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­படும் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

மேலும் புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­த­த­தி­லி­ருந்து நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும் என்று கூற­ப­பட்டு வந்த நிலையில் தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இந்த விட­யத்தை உறு­தி­ப­டுத்­தி­யுள்ளார்.

அண்­மையில் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உரையாற்றியிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விரைவில் நாட்டில் புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டுவரப்படும் என்றும் அதனூடாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்றும் கூறியிருந்தார்.