Breaking News

இலங்கைத் தொடருக்கு பிராவோ – பொல்லார்டை இணைக்க போராடும் சிம்மன்ஸ்

மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­யின் பிராவோ மற்றும் பொல் லார்ட் இல்­லா­மை­யினால் விரக்­தி­ய­டைந்­துள்­ளாராம் அந்த அணியின் பயிற்­சி­யாளர் சிம்மன்ஸ்.


இந்த இரு­வ­ரையும் அணியில் சேர்க்க முயற்சி செய்து வரு­கிறார்.

இதற்கு மேற்­கிந்­தியத் தீவுகள் அணி யின் தலைவர் ஜேசன் ஹோல்­டரும் ஆத­ர­வாக இருக்­கி­றாராம். விரைவில் மேற்­கிந்­தியத் தீவுகள் அணி இலங்­கை­யில் சுற்­றுப்­ப­யணம் செய்யஇருக்­கி­றது.

இந்த தொடரில் இடம்­பெறும் வீரர்­களை தேர்வு செய்­வ­தற்­கான கூட்டம் நடை­பெற்­றது. இந்த கூட்­டத்தில் டுவெய்ன் பிராவோ மற்றும் பொல்­லார்டு ஆகி­யோரை சேர்த்தால் மேற்­கிந்­தி­யத்­தீ­வுகள் அணி வலு­வா­ன­தாக இருக்கும் என்று சிம்மன்ஸ் கூறி­யுள்ளார்.

இந்த கருத்­துக்கு மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் தலைவர் கிளைவ் லோய்ட் ஆத­ரவு தெரி­வித்­துள்ளார். இருந்­தாலும் கிரிக்கெட் சபையில் பயிற்­சி­யா­ள­ருடன் ஐந்து பேர் உள்­ளனர். இதில் மூன்று பேர் சிம்மன்ஸ் கருத்­துக்கு எதி­ராக உள்­ளனர்.

இதனால் அந்த இரண்டு பேரையும் அணியில் சேர்ப்­ப­தற்­கான வாக்­கெ­டுப்பில் 2–-3 என பின்­தங்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. இதனால் அந்த இருவரும் அணியில் இடம்­பெ­று­வது கடினம்தான். ஆனால், இது­பற்றி எந்­த­வொரு கவ­லையும் படாமல் இருவரும் இருபதுக்கு 20 லீக் தொடரில் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.