Breaking News

12 வயது சிறுவன் கொலை - 20 வயது இளைஞர் படுகாயம்

மாத்தறை - திஹகோட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மேலும் இதன்போது 20 வயதான ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இன்று அதிகாலை 01.15 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

அப்பகுதியின் கப்புவத்தை மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இரு குழுக்களிடை ஏற்பட்ட முரன்பாடே கொலைக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.