Breaking News

எமது இனத்­தை பழி­தீர்க்க அர­சாங்­கமே துணைபோகின்­றது - மஹிந்த அணி­யினர் குற்றச்சாட்டு

தமி­ழீ­ழத்தை அமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பின்­ன­ணி­யிலும் புலம்­பெயர் அமைப்­பு­களின் கூட்­ட­ணி­யிலும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் முக்­கி­ய­த்­துவம் வகிக்­கின்­றனர். ஒரு இனத்தை திருப்­திப்­ப­டுத்த மட்­டுமே அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது என ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யான மஹிந்த ஆத­ரவு அணி­யினர் தெரி­வித்­தனர்.

எமது இரா­ணு­வத்தை தண்­டிக்க புலி­களின் வாக்­கு­மூ­லங்­களை ஆதா­ர­மாக்க முயற்­சிக்­கின்­றனர் எனவும் அவ் அணி­யினர் குறிப்பிட்டனர்.

மஹிந்த ஆத­ரவு அணி­யி­னரால் நேற்று கொழும்பில் நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர்கள் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர். இந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­விக்­கையில்,

மஹிந்த ராஜபக் ஷவை சர்­வா­தி­கா­ரி­யா­கவும், ஜன­நா­ய­கத்­திற்கு எதி­ரான ஆட்­சியை எமது அர­சாங்கம் மேற்­கொள்­வ­தா­கவும் விமர்­சித்த அணி­யினர் இப்­போது ஆட்­சியை கைப்­பற்­றி­யுள்­ளனர். ஆனால் எம்மை விமர்­சித்ததை ­வி­டவும் பல­ம­டங்கு அதி­க­மான வகையில் சர்­வா­தி­கார போக்கை இந்த அர­சாங்கம் கையாள்­கின்­றது.

அதேபோல் மஹிந்­தவால் செய்ய முடி­யா­ததை நாம் செய்து காட்­டுவோம் என எமக்கே இவர்கள் சவால் விடுத்­தனர். ஆனால் நாம் செய்­யாத ஒரு விட­யத்தை மட்­டுமே இவர்­களால் செய்து காட்ட முடிந்­துள்­ளது.அதா­வது நாம் தடுத்த தமி­ழீ­ழத்­துக்­கான கொள்­கையை பலப்­ப­டுத்தி பிரி­வி­னை­வா­தி­களின் கைகளில் நாட்டை கொடுத்­துள்­ளனர். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் புலம்­பெயர் பிரி­வி­னை­வா­தி­களின் தேவைக்­கேற்ப நாட்டில் ஆட்­சியை முன்­னெ­டுத்து செல்­கின்­றனர்.

இதை நாம் தடுத்து மக்­களை எமது பக்கம் பலப்­ப­டுத்த முயற்­சிக்கும் சந்­த­ரப்­பங்­களில் எம்­மீது பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி எமது ஜனா­ந­யக செயற்­பா­டு­களை தடுக்­கின்­றனர். பாரா­ளு­மன்­றத்தில் எமது தரப்பின் கருத்­துக்கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்­றது. பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி எம்மை கைது­செய்ய திட்டம் தீட்­டு­கின்­றனர். எம்­மையும் எமது இனத்­தையும் பழி­தீர்க்க அர­சாங்­கமே துணை போகின்­றது.

ஒரு­புறம் புலம்­பெயர் புலி­களை பலப்­ப­டுத்தி தமி­ழீ­ழத்தை உரு­வாக்க எடுக்கும் முயற்­சி­க­ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து அர­சாங்கம் செயற்­படும் அதே­வேளை மேற்­கத்­தேய நாடு­களின் அடி­மை­க­ளாக எம்மை மாற்­றி­ய­மைத்து எமது பொரு­ளா­தார கொள்­கை­க­ளையும், வளங்­க­ளையும் அவர்­க­ளிடம் விற்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். ஆகவே இந்த நாட்டை நேசிக்கும் அனை­வ­ரையும் ஒன்­றி­ணைத்து மீண்டும் ஜன­நா­யக நாடாக எமது நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் போராட்­டத்தை ஆர­ம்பிக்­க­வேண்டும் எனவும் அவர் தெரி­வித்தார்.

பிவி­துரு ஹெல உறு­மய கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உதய கம்­மன்­பில தெரி­விக்­கையில்,

நாட்டின் விடு­த­லையை கருத்­தில்­கொண்டு நாம் செயற்­பட்டு வரு­கின்றோம் . யுத்­தத்தின் போதும் நாட்டின் விடு­த­லையை கருத்­தில்­கொண்டே நாம் செயற்­பட்டோம். அப்­போதும் எம்மை ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ரான அர­சாங்கம் என விமர்­சித்­தனர். ஆனால் நாம் விமர்­ச­னங்­களை கருத்தில் கொள்­ளாது நாட்டை பயங்­க­ர­வா­தத்தில் இருந்து மீட்­டெ­டுத்தோம்.

இப்­போதும் தேசிய விடு­த­லையை வென்­றெ­டுக்கும் ஒரே நோக்­கத்தில் நாம் போராடி வரு­கின்றோம். ஆனால் சிறைச்­சாலை பயத்தை காட்டி எம்மை கட்­டுப்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். ஆனால் சிறைச்­சா­லை­களை காட்டி எமது விடு­த­லைப்­போ­ராட்­டத்தை தடுக்க முடி­யாது. வெள்­ளை­யர்­களின் கொள்­கை­யையும் அவர்­க­ளது திட்­டத்­தையும் எமது நாட்டில் நடை­மு­றைப்­ப­டுத்த இவர்கள் எடுக்கும் முயற்­சி­களை நாம் தோற்­க­டிக்க வேண்டும்.

இந்த அர­சாங்கம் ஒரு இனத்தின் நலன்­களை மட்­டுமே கவ­னத்­தில்­கொண்டு செயற்­ப­டு­கின்­றது. புலம்­பெயர் அமைப்­பு­களின் தேவை­க­ளையும் அவர்­களின் நிகழ்ச்­சி­நி­ரல்­க­ளையும் மட்­டுமே முன்­னெ­டுத்து செல்­கின்­றனர் எனக் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன கூறு­கையில்,

இன்று பாரா­ளு­மன்­றத்தில் உண்­மை­யான எதிர்க்­கட்சி என ஒன்று இல்­லாது போய்­விட்­டது. நாட்டை சரி­யான பாதையில் கொண்டு செல்­லவும், அர­சாங்­கத்தின் ஊழல் மோச­டி­களை வெளிப்­ப­டுத்­தவும் அர­சாங்கம் விரும்­பாத கார­ணத்­தினால் இன்று தமது தேவைக்கு ஏற்ப எதிர்க்­கட்­சியை அமைத்­துள்­ளனர். தமி­ழீ­ழத்தை உரு­வாக்கும் நோக்­கத்தில் செயற்­படும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை கண்­து­டைப்பு எதிர்க்­கட்­சி­யாக நிய­மித்­துள்­ளனர். அதேபோல் எம்மை விமர்சிக்கவும் எமக்கு எதிராக கருத்துகளை பரப்பவும் மக்கள் விடுதலை முன்னணியை விலைகொடுத்து வாங்கியுள்ளனர். அதையும் மீறி நாம் செயற்பட ஆரம்பிக்கும்போது எம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எமது வாய்களை மூடிவிடுகின்றனர்.

அதேபோல் நாட்டில் பொருளாதாரமும், விவசாய நடவடிக்கைகளும் முழுமையாக வீழ்ச்சிகண்டுவிட்டன. கொடுத்த வாக்குறுதிகள் முழுமையாக ஏமாற்றப்பட்டுள்ளது. ஆகவே இப்போதாவது மக்கள் நிலைமைகளை விளங்கிக்கொள வேண்டும் என்றார்.