Breaking News

காணாமல் போனோர் தொடர்பில் யாழில் இன்று ஆர்ப்பாட்டம்

கடந்த காலங்களில் கடத்தப்பட்டோர் தற்றும் காணாமல் செய்யப்பட்டோர் ஆகியோரின் தகவல்களை வெளியிடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று முற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக நடத்தப்படவுள்ளது.

முன்னிலை சோஷலிசக் கட்சி மற்றும் சம உரிமை இயக்கம் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் காணாமல் செய்யப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோரின் உறவினர்கள், பிரதேசவாசிகள் எனப் பலரும் பங்கேற்கவுள்ளனர்.