Breaking News

சம்பந்தன், சுமந்திரன் லண்டனில் ஆலோசனை

ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அதிகாரப் பகிர்வு முறை தொடர்பாக ஆராய்வதற்காக பிரித்தானியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் லண்டனில் பல்வேறு சந்திப்புகளை நடத்தி வருகிறார்.

லண்டனில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்களுடனும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடல்களின் பின்னர், ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அதிகாரப் பகிர்வு தொடர்பான ஆலோசனைகளிலும் இவர்கள் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.