Breaking News

திரு­கோ­ண­மலை இர­க­சிய முகாமில் இருந்து மீட்­கப்­பட்­டவை மனித எலும்புத் துண்­டு­களா?

திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தின் வளா­கத்தில் உள்ள கன்சைட் எனும் நிலத்­தடி இர­க­சிய தடுப்பு முகாமில் இருந்து மீட்­கப்­பட்ட 10 எச்­சங்­களும் மனித எலும்புத் துண்­டு­களா அல்­லது மிரு­கங்­களினதா என தற்­போது ஆய்­வுகள் முன்­னெ­டுக்­கப்பட்டு வரு­வ­தாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தெரி­வித்தனர்.

அத்­துடன் கொழும்பில் வைத்து கடத்­தப்­பட்ட 11 பேரில் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான வேன் கடற்­ப­டை­யி­னரால் இலக்கத் தகடு மாற்­றப்பட்டு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மை­ விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்ளது. அத்து டன் இயந்திரம் மற்றும் செஸி இலக்­கங்கள் தொடர்பில் இர­சா­யன பகுப்­பாய்வு நட­வ­டிக்­கைகள் தொடர்­வ­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கூட்­டுக்­கொள்ளை தொடர்­பி­லான பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த சில்வா கொழும்பு பிர­தான நீதிவான் கிஹான் பில­பிட்­டி­ய­வுக்கு நேற்று அறிவித்தார்.

கொழும்பிலிருந்து 2008 ஆம் ஆண்டு ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான ஆட்­கொ­ணர்வு மனு மீதான விசா­ர­ணைகள் கொழும்பு பிர­தான நீதிவான் கிஹான் பில­பிட்­டிய முன்­னி­லையில் நேற்று நடைபெற்றபோதே குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த சில்வா மேற்­கண்­ட­வாறு நீதி­வா­னிடம் தெரி­வித்தார்.

தெஹி­வ­ளையில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணி­ய­ளவில் மூன்று தமிழ் இளை­ஞர்­களும் அவர்­க­ளது நண்­பர்­க­ளான இரண்டு முஸ்லீம் இளை­ஞர்­களும் பயணம் செய்த காரோடு சேர்த்து கடத்­தப்­பட்­டனர்.

மூன்று மாண­வர்­களின் பெற்­றோர்­களை மனு­தா­ரர்­க­ளாக பெயர் குறிப்­பிட்டு சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கௌரி சங்­கரி தவ­ராசா தாக்கல் செய்த ஆட்­கொ­ணர்வு மனுக்கள் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் விசா­ரிக்­கப்­பட்ட வேளையில் சாட்­சி­களை விசா­ரணை செய்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்­றத்­திற்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.

அதன்­படி இந்த ஆட்­கொ­ணர்வு மனு மீதான விசா­ர­ணைகள் கொழும்பு பிர­தான நீதிவான் கிஹான் பில­பிட்­டிய முன்­னி­லையில் விசா­ரணை செய்­யப்­பட்டு வரு­கின்­ற நிலையில் நேற்­றைய தினம் விசா­ர­ணை நடைபெற்றது.நேற்­றைய வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­ப­மான போது மனு­தா­ரர்­க­ளான முதலாம் இரண்டாம் நபர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத் தரணி கே.வி.தவ­ரசா, சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்­ன மூன்றாம் நபர் சார்பில் சட்­டத்­த­ரணி ஜே.சி.வெலி அமு­னவும் ஆஜ­ரா­கினர். சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட சட்­ட­வாதி துஷித் முத­லி­கேயும் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

இந் நிலையில் வழக்கு விசா­ர­ணைக்கு வந்த போது பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த சில்­வா­விடம் நீதிவான் கேள்வி எழுப்­புகையில்இந்த மாண­வர்கள் தடுத்து வைக்­கப்ப்ட்­டி­ருந்த பகு­தியில் இருந்து எலும்புக் கூடுகள் மீட்­கப்­பட்­ட­தாக பத்­தி­ரிகை ஊடாக அறிந்­து­கொண்டேன். எனினும் அது குறித்து நீங்கள் எதுவும் தெரி­விக்­க­வில்லை. உண்­மையில் அங்கு மனித எலும்புக் கூடு­களை நீங்கள் மீட்­டீர்­களா? என வின­வினார்.

இதற்கு பதி­ல­ளித்த பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த சில்வா,

உண்­மையில் வெளி நாட்டு மேற்­பா­ர்வையா­ளர்­க­ளுடன் திரு­ம­லையில் உள்ள கடற்­படை தளத்தின் கன்சைட் எனும் நிலத்­தடி இர­க­சிய முகா­முக்கு சென்­றி­ருந்த போது சில எச்­சங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. அவை தற்­போது கொழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­கா­ரியின் ஆய்­வு­க­ளுக்­காக அனுப்­பட்­டுள்­ளன. அது குறித்து இன்னும் அறிக்கை கிடைக்­க­வில்லை. என்னை பொறுத்­த­வரை அது விலங்­கு­களின் எழும்­பு­க­ளாக இருக்க வேண்டும். எனினும் அறிக்கை கிடைக்கும் வரை எத­னையும் கூற முடி­யாது. என்றார்.

இதன் போது இடை மறித்த நீதிவான் கிஹான் பில­பிட்­டிய எத்­தனை எலும்புக் கூடுகள் மீட்­கப்­பட்­டன என கேள்வி எழுப்­பினார்.அவை எலும்புக் கூடுகள் என்­பதை விட எலும்புத் துண்டுகள் என்­பதே சரி­யாக இருக்கும். சுமார் 10 எலும்புத் துண்­டுகள் இவ்­வாறு மீட்கப்­பட்­டன.

அத்­துடன் இந்த ஐந்து மாண­வர்­க­ளுக்கும் மேல­தி­க­மாக அதே காலப்­ப­கு­தியில் வத்­த­ளையில் வைத்து கடத்­தப்­பட்ட ஜோன் ரீட் என்­ப­வரின் வேன் கடற்­ப­டையின் அடை­யா­ளத்­துடன் 6021 என்ற இலக்­கத்­துடன் கடற்­ப­டையின் சமுத்­தி­ர­வியல் விஞ்­ஞான பீடத்­தினால் பயன்­ப­டுத்­தப்பட்­டுள்­ளது. இது குறித்து நாம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் கடற்­ப­டை­யி­னரால் சமர்­ப்பிக்­கப்­பட்ட ஆவ­ணங்கள் அந்த வாக­னத்­துடன் பொருந்­த­வில்லை. டொல்பின் ரக வேனான குறித்த வாக­னத்தின் இயந்திரத்தின் இலக்­கமும் செஸி இலக்­கமும் ஒன்­றுடன் ஒன்று வித்­தி­யா­சப்­ப­டு­வது உறு­தி­யா­கின்­றது. இது குறித்து அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் தற்­போது ஆய்­வு­களை மேற்­கொண்­டுள்ளார். எனவே விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன. என்றார்.

இதனை அடுத்து சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த சிரேஷ்ட சட்ட வாதி துசித் முத­லிகே, தமது இடைக்­கால அறிக்கை ஒன்­றினை மன்றில் சமர்ப்­பிக்க நீதி­வா­னிடம் அனு­மதி கோரினார். இந்த விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணைகள் நிறை­வ­டை­யாத நிலையிலும் கோட்டை நீதி­மன்­றிலும் இது தொடர்­பி­லான வழக்­கொன்று நிலு­வையில் உள்ள நிலை­யிலும் இடைக்­கால அறிக்கை ஊடாக முடி­வொன்­றக்கு வர முடி­யாது என இதன் போது நீதிவான் கிஹான் பில­பிட்­டிய சுட்­டிக்­காட்­டினார்.

இதன் போது குறுக்­கிட்ட பாதிக்­கப்­பட்ட தரப்பு சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்ன, முன்னாள் கடற்­படை தள­ப­திக்கு இந்த விவ­காரம் தொடர்பில் தெரிந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளதால் அவ­ரையும் விசா­ர­ணைக்கு அழைக்­கு­மாறு கோரினார். எனினும் முறைப்­பாட்­டாளர் தரப்பு சாட்சி விசா­­ர­ணைகள் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் அதற்­கான வாய்ப்பை பெற்­றுக்­கொ­டுக்க சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ரான சட்ட வாதி துசித் முத­லிகே எதிர்ப்பு தெரி­வித்தார்.

இந் நிலையில் தான் மேன்­மு­றை­யீட்டு மன்­றுக்கு இடைக்கால அறிக்­கை­யினை சமர்­ப்பிக்க முடி­யாது எனவும் குறித்த ஆட்­கொ­ணர்வு மனு தொடர்பில், தற்­போது முன்­னெ­டுக்­கப்ப்ட்­டுள்ள பரி­சோ­த­னைகள் மற்றும் விசா­ரணை­களின் பின்­ன­ரேயே தாம் அறிக்கை சம்ர்­பிக்கப் போவ­தா­கவும் நீதிவான் அறி­வித்தார்.

குறித்த முகாமில் எழும்புகள் மீட்கப்பட்டமையானது இந்த ஆட்கொணர்வு மனுவை பொறுத்தவரை மிக முக்கியமான விடயம் என்பதை சுட்டிக்காட்டிய நீதிவான் அதன் அறிக்கை எப்போது கிடைக்கும் என புலனாய்வுப் பிரிவிடம் கேட்டார். அதற்கு 3 மாதங்கள் செல்லும் எனவும் அதில் ஒரு மாதம் தற்போதும் கழிந்துவிட்டதாகவும் பொலிஸ் பரிசோதகர் பதிலளித்தார்.

இதனையடுத்து இது குறித்த விசாரணைகளை எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிவான் கிஹான் பிலபிட்டிய அன்றைய தினம் சட்ட மா அதிபர் சார்பில் முழுமையான அறிக்கையினை மன்றில் சமர்ப்பிக்க உத்தர்விட்டார்.