Breaking News

மஹிந்த அணியினருக்கு எதிராக விரைவில் ஆர்ப்­பாட்டம்

நாட்டின் சகல தொழிற்­று­றை­க­ளிலும் தமது ஆதரவாளர்களை நிலை­கொள்ளச் செய்­துள்ள மஹிந்த அணி­யினர் தற்­போது எல்லாத் தொழில் துறை­க­ளி­னுள்ளும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றனர். சர்­வ­தேச மட்­டத்தில் யுத்தக் குற்­ற­வா­ளி­க­ளா­கி­விட்­டனர்.எனவே மஹிந்த அணியில் உள்ள 30 பேரும் இளை­ஞர்­களை இன­வா­தி­க­ளாக்கி இவர்­கள் ஊடாக தம்மை பாது­காத்­துக்­கொள்ள முற்­ப­டு­கின்­றனர். மக்­களை ஒன்று திரட்டி விரைவில் அவர்­களின் முயற்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைப்­போ­மென நவ சம­ச­மாஜ கட்­சியின் தலைவர் கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ன தெரி­வித்தார்.

மஹிந்த அணியினர் கொழும்பில் நடத்திய கூட்டம் குறித்து ஊடகம் ஒன்று வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த காலத்தில் ஜன­நா­ய­கத்­திற்கு முர­ணாக ஆட்சி செய்த மஹிந்த ராஜ­பக் ஷ உள்­ளிட்ட முப்­பது பேர் அடங்­கிய குழு தற்­போது நாட்டில் குழப்ப நிலையை ஏற்­ப­டுத்தி பல்­வேறு நாச­கார செயற்­பா­டு­களை முன்­னெடுத்து வரு­கின்­றது.

முன்னாள் ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலப்­ப­கு­தியில் மஹிந்­தவின் ஆத­ர­வாளர் குழுக்­களில் சிலர் நாட்டின் சகல தொழிற்றுறை­க­ளிலும் சேவையில் அமர்த்­தப்­பட்­டனர். இவர்கள் தான் நாட்டில் ஏற்­படும் மின்­வெட்டு, துப்­பாக்கிச் சூடு, இன­வாதம் தூண் டல் உள்­ளிட்ட நாச­கார செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் என்­பது விரைவில் வெளிச்­ச­மாகும்.

இவர்கள் கடந்த அர­சாங்­கத்தில் இருந்த போது அதி­கார போக்கில் யுத்த க்குற்­றங்­களில் ஈடு­பட்­டமை தற்­போது சர்­வ­தேச அரங்­கிலும் முன்னாள் இரா­ணுவ தள­பதி சரத் பொன்­சே­காவின் ஊடா­கவும் படிப்­ப­டி­யாக வெளிச்­சத்­திற்கு வரு­கின்­றன.

இந்­நி­லையில் இரா­ணு­வத்­தி­னரை சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு அனுப்பி தண்­டிக்கப் போகின்­றனர் என்ற எண்­ணக்­க­ருவை அவர்கள் மத்­தியில் உரு­வாக்கி அவர்­களை அர­சாங்­கத்­திற்கு எதி­ராக செயற்­படச் செய்து குழப்பத்தை ஏற்படுத்த முயற்­சிக்­கின்­றனர்.

இரா­ணு­வத்தை மட்­டு­மல்­லாது இளை­ஞ­ரி­டத்தில் இன­வாதம் பாடி அவர்­களின் மன­திலும் ஆழ­மாக இன­வாதத்தை விதைக்க முற்­ப­டு­கின்­றனர். இவ்­வாறு இளைஞர் மத்­தியில் இன­வாத குழு­வொன்றை தோற்­று­வித்து அதன் மூலம் இன்று சர்­வ­தேச மட்­டத்தில் குற்­ற­வா­ளி­க­ளாக்­கப்­பட்­டுள்ள மஹிந்த உட்­பட 30 பேரையும் காப்­பாற்­றிக்­கொள்ள முயற்­சிக்­கின்­றனர்.

இவர்­களின் அட்­ட­கா­சங்கள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் நிலையில் இதற்கு வெகு­வி­ரைவில் முற்­றுப்­புள்ளி வைக்க நாம் தீர்­மா­னித்­துள்ளோம் அரசியல் சக்திகளை விட மக்கள் பலம் போதும் என்ற விதத்தில் நவ சமசமாஜ கட்சி, மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகிய ஏனைய தரப்புக்கள் தொழிற் சங்கங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றார்.