Breaking News

இன­வா­தத்தை முறி­ய­டித்து அரசியல் தீர்வை முன்­வைப்போம்!

தமிழ் மக்­களின் தலை­வ­ரா­கவும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­கவும் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் இருக்­கின்­ற­மையே தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வை காண முடியும் என்ற நம்­பிக்­கையை எமக்கு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்று நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

தற்­போது கிடைத்­துள்ள சிறந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி நிரந்­தர அர­சியல் தீர்வைக் காணா­விடின் தமிழ் மற்றும் சிங்­கள மக்­களின் எதிர்­காலம் இருண்­டு­விடும். எனவே இதனை புரிந்­து­கொண்டு அனை­வரும் செயற்­ப­ட­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

நாட்டில் அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளையும் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் முயற்­சி­க­ளையும் குழப்­பு­வ­தற்கு சிலர் முயற்­சிப்­பதை நாங்கள் காண்­கின்றோம். ஆனால் மக்கள் அந்தத் தரப்­பி­ன­ருக்கு இட­ம­ளிக்­க­மாட்­டார்கள் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பில் தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னைக்கு ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய தீர்வு கிடைக்­குமா என வின­வி­ய­போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அமைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ இந்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை குழப்பி இன­வா­தத்தை பரப்­பு­வ­தற்கு சில தரப்­பினர் பாரிய முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர் என்­பதை நாங்கள் அறி­கின்றோம். ஆனால் கொழும்பில் நடத்­தப்­பட்ட ஒன்­றி­ணைந்த எதி­ர­ணியின் கூட்­டத்தை நாங்கள் ஒரு பொருட்­டா­கவே கரு­த­வில்லை. அதனை நாங்கள் சவா­லா­கவே எடுக்­க­வில்லை.

நடை­பெற்று முடிந்த இரண்டு பிர­தான தேர்­தல்­களில் இந்த நாட்டில் இன­வாதம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது. இன­வாதத் தரப்­புக்­களை மக்கள் மிகவும் தெ ளிவான முறையில் நிரா­க­ரித்­தி­ருந்­தனர். இன­வா­திகள் தோல்­வி­ய­டைந்­தனர். ஆனால் அவ்­வாறு தோல்­வி­ய­டைந்த தரப்­பினர் தற்­போது 4000 அல்­லது 5000 பேரை இணைத்துக் கொண்டு கொழும்பில் கூட்டம் நடத்­து­வது ஒரு விட­யமே அல்ல.

என்னால் வேண்­டு­மா­னாலும் தனித்து 5000 பேரை அழைத்துக் கொண்டு கூட்டம் நடத்த முடியும். எனவே மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான கூட்­டத்தை நாம் சவா­லாக எடுக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அது­மட்­டு­மன்றி இவ்­வாறு கூட்­டங்­களை நடத்­து­வதன் மூலம் ஒரு­நாளும் ஆட்­சியை கைப்­பற்ற முடி­யாது. ஆட்­சியை கைப்­பற்­று­வ­தற்கு தேர்தல் நடை­பெற்றே ஆக வேண்டும்.

மஹிந்த ராஜப்­ஷவின் ஆட்சிக் காலத்தில் நாங்­களும் கொழும்பில் 50000 பேரைக் கொண்டு கூட்­டங்­களை நடத்­தி­யி­ருந்தோம். ஆனால் அவ்­வாறு கூட்­டங்­களை நடத்­து­வதன் மூலம் உட­ன­டி­யாக ஆட்­சியை கைப்­பற்ற முடி­யாது என எங்­க­ளுக்கு தெரியும். எனவே மஹிந்த தரப்­பினர் 4000 பேரைக் கொண்டு நடத்­திய கூட்டம் தொடர்பில் நாங்கள் அலட்­டிக்­கொள்­ள­வேண்­டி­ய­தில்லை.

இது இவ்­வா­றி­ருக்க தற்­போது நாட்டில் இன­வா­தத்தை பரப்­பு­வ­தற்கு பலர் முயற்­சிக்­கின்­றனர். எவ்­வா­றான இன­வாத செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் பின்­ன­டைவு ஏற்­ப­டாது.

இது தொடர்பில் நாங்கள் சர்­வ­தே­சத்­தையும் சிறந்த முறையில் தெ ளிவு­ப­டுத்தி வரு­கின்றோம். குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்கு நாங்கள் தற்­போது நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருக்­கின்றோம். அந்த புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக தமிழ்­பேசும் மக்­களின் இனப் பிரச்­சி­னைக்கு சக­லரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை காண முடி­ய­மென நாங்கள் நம்­பு­கின்றோம்.

இந்த நம்­பிக்­கையை தமிழ் மக்­களும் எம்­மீது வைக்­க­வேண்டும். இன­வாத தரப்­புக்­களின் முயற்­சி­களை நிரா­க­ரித்து மிகவும் பொறு­மை­யாக செயற்­பட்டு நாம் தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண வேண்டும். எவ்­வா­றான செயற்­பா­டு­களை மேற்­கொள்வோம் என்­பது குறித்து தற்­போது நாம் கூறிக் கொண்­டி­ருக்க முடி­யாது. தேவை­யான நேரத்தில் அவ­சி­ய­மான திட்­டங்­களை நாங்கள் வெளிப்­ப­டுத்­துவோம்.

விசே­ட­மாக தமிழ் மக்­களின் தலை­வ­ரா­கவும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­கவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­மந்தன் இருக்­கின்­ற­மையே தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சியல் தீர்வை காண முடியும் என்ற நம்­பிக்­கையை எமக்கு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. காரணம் அவர் சிரேஷ்ட மூத்த அர­சி­யல்­வா­தி­யாக இருக்­கின்றார். அவரின் ஆரோக்­கி­ய­மான பங்­க­ளிப்­புடன் இந்தப் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வைக் காண­மு­டியும் என்­பது எமது நம்­பிக்­கை­யாகும்.

இதே­வேளை இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து நல்­லாட்­சியை உரு­வாக்­கி­யுள்ள இந்த சந்­தர்ப்­பத்தில் நாம் அனைவரும் சந்தர்ப்பத்தை தவற விடாது தேசியப் பிரச்சினைக்கு தீர்வைக் கண்டுவிடுவதற்க முயற்சிக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டோமானால் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு எதிர்காலம் என்பது இருள் மயமானதாக மாறிவிடும் என்பதை மறந்துவிடக்கூடாது.

நாம் எந்தவொரு இனவாதத் தரப்பிற்கும் அடிபணியாது நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்போம். இவற்றைக் குழப்புவதற்கு முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளுக்கு மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.