Breaking News

மஹிந்தவுக்கு இரா­ணுவ பாது­காப்பை வழங்­கவே முடி­யாது

''முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷவின் இரா­ணுவப் பாது­காப்பை நீக்­கு­வ­தற்கு பாது­காப்­புத்­துறை எடுத்­துள்ள தீர்­மா­னத்தில் எந்­த­வித மாற்­றமும் இல்லை. எந்த காரணம் கொண்டும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இரா­ணுவப் பாது­காப்பை வழங்­கவே முடி­யாது'' என பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன தெரி­வித்தார்.

இரா­ணு­வத்தின் சேவையை கொச்­சைப்­ப­டுத்தும் வகையில் இவர்கள் நடந்­து­கொள்­வதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் இரா­ணுவப் பாது­காப்பு தொடர்பில் சர்ச்­சைகள் எழுந்­துள்ள நிலையில் தனது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்டும் என தொடர்ச்­சி­யாக மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்து வரு­கின்றார். இந்த விவ­காரம் தொடர்பில் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ரிடம் கொழும்பு ஊடகம் ஒன்று வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

இரா­ணுவப் பாது­காப்பு என்­பது அர­சியல் விவ­காரம் அல்ல. இது நாட்டின் தேசியப் பாது­காப்­புடன் தொடர்­பு­டைய விட­ய­மாகும். அந்த விட­யங்­களில் அனா­வ­சி­ய­மான விமர்­ச­னங்­களை முன்­வைக்­கவோ அல்­லது தமது விருப்­பத்­துக்கு அமைய இரா­ணுவ செயற்­பா­டு­களில் தலை­யி­டவோ முடி­யாது. அவ்­வாறு இருக்­கையில் கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்­த­பாய ராஜபகஷ ஆகியோர் யுத்த வெற்­றியை தமது சொந்த வெற்­றி­யாக மாற்­றிக்­கொண்ட பின்னர் நாட்டில் இரா­ணு­வ­ம­ய­மாக்கள் மட்­டுமே நடை­பெற்­றது. அதன் தாக்கம் இன்­று­வ­ரையில் அவர்­களின் மனங்­களில் உள்­ளது.

எவ்­வாறு இருப்­பினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் இரா­ணுவப் பாது­காப்பை நீக்­கி­விட்டு சிவில் பாது­காப்பை மாத்­திரம் வழங்­கு­வது என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த தீர்­மானம் பாது­காப்பு சபையின் ஆலோ­ச­னைக்கு அமை­யவும் நாட்டின் சூழ்­நி­லையை கருத்தில் கொண்­டுமே எடுக்­கப்­பட்­டது. ஆகவே இப்­போது எடுத்­தி­ருக்கும் இந்த தீர்­மா­னத்தில் எந்த மாற்­றமும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ இப்­போது சாதா­ரண பாரா­ளு­மன்ற உறுப்­பினர் போன்று செயற்­ப­டு­கின்றார். ஆகவே அவரை சாதா­ரண நிலையில் தான் கவ­னிக்க வேண்டும். எனினும் நாம் அவ­ரது பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் முன்னாள் ஜனா­தி­பதி என்ற அந்­தஸ்­தையும் வழங்­கி­யுள்ளோம். பாது­காப்பு விதி­களை மீறி அவ­ருக்கு இரா­ணுவ பாது­காப்பு வழங்­க­பட மாட்­டாது.

மேலும் இவர்கள் எமது ஆட்­சியை குழப்ப ஏதா­வது ஒரு கார­ணத்தை தேடு­கின்­றனர் என்­பதே உண்­மை­யாகும். அதற்­கா­கவே இரா­ணுவ விவ­கா­ரங்­களை கூட இவர்கள் அர­சி­ய­லாக்­கு­கின்­றனர். எனினும் இரா­ணுவ விட­யங்­களை விமர்­சிப்­ப­தையும், பாதுகாப்பு தரப்பை கொச்சைப்படுத்தும் செயல்களையும் இவர்கள் உடனடியாக கைவிட வேண்டும். தேசிய பாதுகாப்பை குழப்பும் வகையிலும், இராணுவத்தை விமர்சிக்கும் வகையிலும் செயற்படாது இராணுவத்தின் சேவைகளை பலப்படுத்த வேண்டும் என்றார்.