Breaking News

எஸ்.எம். சந்திரசேனவினால் மஹிந்த குழுவின் இரகசியம் கசிவு



புதிய கட்சியை உருவாக்கும் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாகவும், தற்பொழுது புதிய அரசியல் யாப்பை அமைக்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கடந்த 24 ஆம் திகதி அறிவித்ததன் ஊடாக, மஹிந்த குழுவின் இரகசியம் கசிந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பந்துல குணவர்தன இதனை மறைத்துக் கொள்ள முடியாமல் அது அவரின் தனிப்பட்ட அபிப்பிராயம் என ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு வகுத்திருந்த திட்டமும் சந்திரசேனவினால் அம்பலப்படுத்தப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.