Breaking News

நாளை எள்ளெண்ணெய் எரிக்க இலண்டன் செல்கிறார் சரா எம்.பி

கடந்த மாதம் 24ம் திகதி யாழ்ப்பாணத்தில்
மிகப்பிரமாண்டமான முறையில் இடம்பெற்ற “எழுக தமிழ்“ நிகழ்வினை தடுப்பதற்கான சகல வழிகளிலும் தடைகளை ஏற்படுத்திய உதயன் பத்திரிகை நிர்வாகியும் யாழ் பாராளமன்ற உறுப்பினருமான சரவணபவன் நாளை இலண்டனில் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவுள்ளதாக தமிழ்கிங்டொத்திற்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்துள்ளது.

எழுக தமிழ் நிகழ்விற்கு முன்னைய நாட்களில் வர்த்தகர் சங்கம் ஆதரவில்லை என்ற படுமோசமான பொய்யினையும் எழுக தமிழ் நிகழ்விற்கு பொலீசார் அனுமதி வழங்கவில்லை என்ற செய்தியும் பின்னர் எழுக தமிழ் அன்று இன்று புரட்டாதிச் சனி இன்று எள்ளெண்ணை எரிக்காவிட்டால் 5 வாரங்கள் காத்திருக்கவேண்டும் என்று தலைப்பு செய்தியையும் வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் மிகுந்த கோபத்திற்கு உள்ளாகியிருந்தவர் சரவணபவன். இவர் தனது மகளின் பிறந்தநாளை மைத்திரியை அழைத்து வீட்டில் கொண்டாடும் அளவிற்கு அரச செல்வாக்குடையவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எழுக தமிழுக்கு எதிராக உதயன் பத்திரிகை செய்தி

எழுக தமிழுக்கு எதிராக உதயன் பத்திரிகை செய்தி


உண்மையான செய்தி  வேறு பத்திரிகையில்

எழுதிய “தமிழ் அரச ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்” மற்றும் “தனி மனித சாதனையாளரின் முத்துவிழா மலர்” ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா லண்டனில் நாளை இடம்பெற உள்ளது.

இதில் கலந்துகொள்ளும் சரவணபவன் கட்டாயம் தேசியம் சார்பாக பொங்கி எழுவார் என்பது திண்ணம். இங்கே தேசியமும் கொழும்பில் நல்ல உறவும் கொண்டுவரும் சரவணபவனின் உண்மை முகத்தை இலண்டன்வாழ் தமிழ் ஆர்வலர்கள் புரிந்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

இன்நிகழ்வு Trintity Hall, East Avanue, Manor Park, London E12 6SG 

இல் நாளை சனிக்கிழமை (15-10-2016) மாலை 4:30 மணிக்கு நடைபெறவுள்ளது.



முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்