Breaking News

கறுப்பு தீபாவளியாக அனுஸ்டிப்போம்! தமிழ் தேசிய மாணவர் பேரவையினர்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களது படுகொலையை கண்டித்து தமிழ் தேசிய மாணவர் பேரவையினர் இவ்வருட தீபாவளி தினத்தை கறுப்பு தீபாவளி தினமாக  படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்காக  தங்கள் தங்கள் இல்லங்களிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துமாறு அனைத்து மக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.


காலா காலமாக எமது மாணவர் சமுதாயத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளும், திட்டமிட்ட வன்செயல்களும் நீக்கவும் மாணவர்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் கல்வியின்பால் வளர வேண்டும் என்பதற்காகவும் இத் தீபாவளி தினத்தை கறுப்பு தீபாவளி தினமாக அனுஸ்டிக்குமாறு தமிழ்தேசிய மாணவர் பேரவையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.