Breaking News

மாணவர்கள் படுகொலை செய்த இடத்தை விசேட புலனாய்வுத்துறை ஆய்வு?



யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட இடத்தை கொழும்பில் இருந்து வந்த ஸ்ரீலங்கா விசேட புலனாய்வு பிரிவினர் ஆய்வு செய்துள்ளனர்.

கடந்த 20ம் திகதி நள்ளிரவு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவு யாழ். குடாநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேற்படி குழு 24.10.2016 மாலை குளப்பிட்டி பகுதியில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.