தன்னுயிரை கொடுத்து பிற உயிர்களை காத்தவர்கள் மாவீரர்கள்: சீமான் - THAMILKINGDOM தன்னுயிரை கொடுத்து பிற உயிர்களை காத்தவர்கள் மாவீரர்கள்: சீமான் - THAMILKINGDOM

  • Latest News

    தன்னுயிரை கொடுத்து பிற உயிர்களை காத்தவர்கள் மாவீரர்கள்: சீமான்



    வீரம் என்பது நூறு பேரை வெட்டி வீழ்த்துவது அல்லவென குறிப்பிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னுயிரை கொடுத்தேனும் இன்னொரு உயிரை காப்பாற்றுவதே உண்மையான வீரம் என்றும் அப்படிப்பட்ட வீரத்தை உலகிற்கு காட்டியவர்களே மாவீரர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    தமிழ் மக்களது உரிமைக்காய் போராடி உயிர்களை தியாயம் செய்த மாவீரர்களை நினைவுகூர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிலும் மாவீரர் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. நாம் தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்ட குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    புறநானூற்றில் வீரத்தை படித்தாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனே வீரத்தை படைத்தார் எனக் குறிப்பிட்ட சீமான், யார் என்ன கூறினாலும் தமிழ் மக்களின் தலைவர் பிரபாகரன் மட்டுமே என மேலும் தெரிவித்துள்ளார்.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: தன்னுயிரை கொடுத்து பிற உயிர்களை காத்தவர்கள் மாவீரர்கள்: சீமான் Rating: 5 Reviewed By: Tamilkingdom
    Scroll to Top