இன மாத ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி ..!!
நாட்டில் மத ரீதியாகவும் இனரீதியாகவும் விரிசல்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தி நாட்டை அழிவுக்குட்படுத்துவதற்கு சில சக்திகள் சதிமுயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் செயற்பட்டு வருகின்றது என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்றோம் என்று இணை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்க செயற்பாடுகளை குழப்பும் இவ்வாறான சில சக்திகளின் சதிமுயற்சிகள் தொடர் பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முழு அரசாங்கத்தினரும் அவதானத்துடன் இருக்கின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நல்லாட்சி அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் போது அதனை தடுத்துநிறுத்தி நாட்டை அழிவுக்கு உட்படுத்தும் முயற்சியில் சில சக்திகள் செயற்பட்டு வருகின்றமையை நாங்கள் அறிகின்றோம்.
அதாவது மத ரீதியாகவும் இனரீதியாகவும் விரிசல்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தி நாட்டை அழிவுக்குட்படுத்துவதற்கு சில சக்திகள் சதி முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பில் அரசாங்கம் ஆழமான முறையில் அவதானம் செலுத்தியுள்ளது.
அந்த வகையில் இந்த விடயம் குறித்து நல்லாட்சி அஅரசாங்கம் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் செயற்பட்டு வருகின்றது என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்றோம். அத்துடன் இவ்வாறான சில சக்திகளின் சதி முயற்சிகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முழு அரசாங்கத்தினரும் அவதானம் செலுத்தியுள்ளனர்.








