Breaking News

இலங்கை அரசின் கொள்கை மாறவில்லை: புலிகளின் விசேட அணி குற்றச்சாட்டு



இலங்கையிலிருந்து தமிழ் மக்களை அப்புறப்படுத்தும் இன அழிப்பு திட்டத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையென மாவீரர் தினத்தையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் விசேட அணியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

‘கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் அரச படைகளிடம் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் அதேபோன்று ஒட்டுக்குழுக்களாலும் அரச ஆதரவு குழுக்களாலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் தொடர்ந்தும் அங்கலாய்ப்புக்களுடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

இவையெல்லாம் இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மக்கள் தொடர்பான கொள்கைகளில் மாற்றம் ஏற்படவில்லையென்பதையே வெளிப்படுத்தி நிற்கின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.