புலிகளுக்காக மாவீரர் கொண்டாட்டம் இடம்பெற்றால் சட்ட நடவடிக்கை!
யுத்தத்தினால் மரணித்த விடுதலை புலி உறுப்பினர்களை நினைவு கூறும் வகையில் யாரேனும் ஒன்று கூடும்பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இதனை தெரவித்தார்.தமக்கு மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்கான உரிமை இருப்பதாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாகாணசபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சிங்கள ஊடகம் ஒன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை தொடர்பு கொண்டது. இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் மாவீரர் கொண்டாட்டத்திற்காக எவருக்கும் இடமளிக்கப்படப் போவதில்லை என குறிப்பிட்டார்.








