Breaking News

சீனாவினதும், இந்தியாவினதும் உதவி தேவை – இலங்கை



நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சீனாவினதும், இந்தியாவினதும் உதவி தேவைப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, “ எதற்காக அரசாங்கம் சீனாவை நோக்கித் திரும்பியது என்று சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கேட்கின்றனர்.

பின்னர், நாங்கள் எங்கிருந்து பணத்தைப் பெற முடியும்?

இந்தியாவின் கடனுதவி கிடைக்காமல் விட்டால், சிறிலங்கா தொடருந்து வலையமைப்பை எவ்வாறு அபிவிருத்தி செய்திருக்க முடியாது.

சில அரசியல்வாதிகளால், சீனாவை நோக்கியோ, இந்தியாவை நோக்கியோ நாம் திரும்பக் கூடாது என்று மக்கள் முன் கூற முடியும். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமற்றது” என்றும் அவர் தெரிவித்தார்.