Breaking News

அதிகாரப்பகிர்வு அவசியமா.? : ரெஜினோல்ட் குரே



அதிகாரப் பகிர்வு தொடர்பில் யார் விவாதித்தாலும், பாராளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்தாலும் அதிகாரப்பகிர்வு அவசியமா என்பது தொடர்பில் மக்களே இறுதி தீர்மானம் எடுக்கவேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். 

யுத்தத்தின் பின்னர் வடக்கில் தமிழ் மக்களின் செயற்பாடுகளும் அவர்களின் நகர்வுகளும் பூரண ஜனநாயகத்தை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்கள் மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் வடமாகாண ஆளுநரின் நிலைப்பாட்டை கொழும்பு ஊடகம் ஒன்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.