Breaking News

வவுனியாவில் சம்பந்தனின் உருவப்படம் தீயிட்டு எரிக்கப்பட்டது(காணொளி)

கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
ஒன்றிணைந்து இன்று காலை வவுனியாவில் அடையாள உண்ணாவிரம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இன்று மாலை 4 மணியளவில் முடிவுக்கு வந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இறுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனின் புகைப்படத்தினை தாங்கி பேரணியாக சென்று இறுதியில் அவரது படத்திற்கு எரியூட்டியதோடு அவரை கடும்கோபமாக திட்டித் தீர்த்தனர்.



அப்போது அவர்கள் சம்பந்தர் அய்யாவின் உருவப்படத்தை எரித்து மனம் நொந்து திட்டின வார்த்தைகள்,

"நாசமாய் போ"

"உனக்கு இனி ஒரு ஜென்மம் கடவுள் கொடுக்கக்கூடாது"

"உனக்கு கதிரைக்குத்தான் ஆசை"

"நீ தமிழன்ட ரத்தத்தை குடிக்க வந்தவன்"

"சண்டாளன்"

"நீதியில்லாதவன்"

"நேர்மையில்லாதவன்"

"இண்டைக்கு ரோட்டில நாங்க நிக்கிறம்"

"அவ்வளவுக்கும் காரணம் நீதான்"
.
"நீ சாகு, செத்து தொலை"

"நீ நல்ல மனுசனாக இருந்தால்"

"நீ நல்லவனுக்கு பிறந்திருந்தால்"

"எங்களுக்கு நல்லதொரு தீர்வை தா"

"நல்லாய் நியுசில பார்"

"எல்லா சனலிலும் இதைப் பார்"

"பார்த்திட்டு எங்கட பிள்ளைகளை விடு"

"எங்கட உறவுகளை விடு"

"பொய் சொல்லாதே"

"பொய் கதைக்காதே"

"உன்ர வாயில் இருந்து வாற வார்த்தை எல்லாமே பொய்தான்".



முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்