Breaking News

தமிழர்களின் காணிகளை சுவீகரித்து பௌத்த விகாரை கட்ட அனுமதி

வட மாகாணத்தில் இராணுவம் காணி சுவீகரிப்பதற்கு அப்பால் தொல்பொருள் திணைக்களம் பல காணிகளை சுவீகரிப்பதாகவும் தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரித்து பௌத்த விகாரை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.


திருக்கேதீஸ்வரத்திற்கு அண்மையில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணிகளை சுவீகரித்த தொல்பொருள் திணைக்களம், அதில் மூன்று ஏக்கர் காணியை பௌத்த விகாரை அமைப்பதற்கு வழங்கியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்கு இடையூறாக நாட்டில் காணப்படும் பயங்கரவாத பிரச்சினையை அரசாங்கம் காரணம் காட்டியதாவும் யுத்தம் நிறைவுபெற்று 8 வருடங்கள் கடந்துள்ள போதிலும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை எனவும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.