சாந்தனின் இறுதி ஊர்வலத்தில்-“இந்தமண் எங்களின் சொந்த மண் பாடல்“(காணொளி)
மாங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற மறைந்த ஈழத்து பாடகர் சாந்தன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது சாந்தனின் புகழ்பூத்த பாடல்களில் முதன்மையான பாடலான “இந்தமண் எங்களின் சொந்த மண்“ என்ற பாடல் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளிற்கமைய அவரது அஞ்சலி நிகழ்வில் ஒலிபரப்பப்பட்டது.
பாடல் ஒலிபரப்பபட்டதும் கூடியிருந்த மக்கள் அனைவரிலும் ஓர் ஆர்ப்பரிப்பையும் ஆழ்ந்த துயரத்தையும் காணக்கூடியதாக இருந்ததாக அங்கிருந்த தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தொடர்புடைய முன்னைய பதிவு
இறுதி யுத்த களத்திலிருந்து சாந்தனின் வாக்குமூலம்(காணொளி)
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்