Breaking News

காணாமல்போன போராளிகள் இறந்துவிட்டனர்?: சிங்கள ஊடகம்!

காணாமல் போனவர்கள் அனைவரும் யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டமை நிரூபணமாகியுள்ளது என சிங்கள ஊடகம் ஒன்று மேற்கோள்காட்டி செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது.


இலங்கைப் படையினரால்  காணாமல் ஆக்கப்பட்ட 500 விடுதலைப் புலிகளும் போரில் கொல்லப்பட்டுள்ளமை 8 வருடங்களின் பின்னர் உறுதியாகியுள்ளதாகவும் குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இதுவரை காலமும் அனைவருடைய பெயர்களும் காணாமல் போனோர் பட்டியலில் காணப்பட்டதாகவும், முள்ளிவாய்க்காலில் நிறுவப்படவிருந்த நினைவுத் தூபியில் பொறிக்கப்படவிருந்த உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியலில் இந்த 500 விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.