நல்லூர் சூடு: பொலிஸ் அதிகாரி உயிரிழந்தார்
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இன்று இரவு 12.20 மணியளவில், சிகிச்சை பயனின்றி உயிரிழந்து உள்ளார்.
யாழ்.நல்லூர் பின் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் காயமடைந்திருந்தனர்.
காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில், சார்ஜென்ட் தர பொலிஸ் உத்தியோகத்தர் இரவு 12.20 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்து உள்ளார்.