Breaking News

ரவி கருணாநாயக்கவின் பதவி விலகல் மக்களுக்கு கிடைத்த வெற்றி: மஹிந்த அமரவீர


ரவி கருணாநாயக்கவின் பதவி வில கல் எதிரணியினருக்கோ அல்லது அரசாங்க தரப்பினருக்கோ கிடைத்த வெற்றியல்ல. அது மக்களுக்கு கிடைத்த வெற்றியென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 


மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருந்த ரவி கருணாநாயக்க நேற்றைய தினம் பதவி ராஜினாமா செய்திருந்தார். இது குறித்து சபையில் கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த அமரவீர மேற்படி தெரிவித்துள்ளார்.  மேலும் தெரிவிக்கையில், “ரவியின் பதவி விலகலை நான் மதிக்கின்றேன். 

அதே நேரத்தில் இதனை யாரும் தமக்கானதாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஊழல் மோசடிகளால் வெறுப்படைந்த மக்கள் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்தனர். 

மக்கள் ஆணைக்கு ஏற்பவே அரசாங்கம் செயற்பட வேண்டும். அதுவே ஜனநாயக பண்பாகும். எனவே இந்த விடயத்தில் “மக்களே வெற்றிபெற்றுள்ள னர்” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ஊழல் மோசடிகள் விடயத்தில் ஜனாதிபதி மிகவும் பொறுப்புடன் செயற்படுகின்றார் என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் இனிவரும் காலங்க ளிலும் அரசாங்கம் நேர்மையுடனேயே செயற்படும் என்றும் உறுதிய ளித்துள்ளார்.