Breaking News

இலங்கை மக்கள் மீதான களங்கத்தை முற்றுமுழுதாக நீக்கியுள்ளதாக ஜனாதிபதி....!

சர்­வ­தேச நாடு­கள் மத்­தியில் இல ங்கை மக்கள் மீதான கலங்கரையை முழுமையாக நிவர்த்தி செய்துள்ள தாக ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் மற்றும் மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை­யாளர் உள்­ளிட்ட சர்­வ­தேச நாடு­களின் தலை ­வர்களைச் சந்­தித்து எமது நாட்டின் நல்­லி­ணக்கம் சக­வாழ்வு மற்றும் ஐக்­கியம் தொடர்பில் தெளிவுபடுத்தி யுள்ளேன்.  எமது நாட்டின் அபி­வி­ருத்தி தொடர்­பி­லான எனது கோரிக்கை உலக தலை­வர்­களால் ஏக­ம­ன­துடன் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டதாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குறிப்பிட்டுள்ளார். நாட்டை துரித அபி­வி­ருத்தி செய்ய வேண்­டு­மானால் ஸ்திர­மான அர­சியல் சூழல் மற்றும் சர்­வ­தேச நாடு­களின் ஒத்­து­ழைப்புத் தேவையெனத் தெரிவித்துள்ளார். 

இதற்­க­மைய எமது பாரா­ளு­மன்­றத்­திலும் 2 - 3 அதிகப் பெரும்­பான்மை அர­சி யல் பலமும் எமக்­கி­ருப்­ப­துடன், சர்­வ­தேச நாடு­களின் பூரண ஒத்­து­ழைப்­புக்­களும், ஆத­ரவும் எமது நாட்­டிற்கு கிடைக்கின்றன. சர்­வ­தேச நாடு­களில் எமது நாட்டைப் பற்­றி­யி­ருந்த களங்­கத்தை, நான் முற்­று­மு­ழு­தாக நீக்கியுள்ளேன். 

ஐ.நா. செய­லாளர், மனித உரிமை ஆணை­யாளர் உள்­ளிட்டு சர்­வ­தேச நாடு­களின் முக்­கிய தலை­வர்கள் பல­ரி­டமும் நான் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்டு, நாட்டில் செயற்பட்டு க்கொண்டிருக்கும் நல்­லி­ணக்கம், சக­வாழ்வு, ஐக்­கியம் தொடர்­பான விட­யங்­களை விரிவாக எடுத்துரைத்து ள்ளேன். 

எனக்கு கிடைத்­தி­ருந்த வாய்ப்­புக்­களை சிறப்பாகப் பயன்­ப­டுத்­தி விட்டேன்.  அத்­துடன் எமது நாட்டின் மேம்­பா­டு­களை கவனத்தில் எடுத்து உத­வி­களை நல்குமாறும் உலகத் தல­வைர்­க­ளிடம் என்னால் விடு­க்­கப்­பட்ட கோரிக்­கைகள் அனைத்தும் முழு மன­துடன் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டதாக தெரிவித்துள்ளார்.  

எமது நாட்டின் அபி­வி­ருத்­தியை வேகமாகச் செயற்படுத்துவதற்கு எவ்வித தடையும் தற்­போது இல்லை. எமது நாட்டில் வரட்சி, வௌ்ளம் போன்ற இயற்கை சீற்­றத்­தினால் எமது மக்கள் சொல்­லொண்ணாத் துய­ரங்­களை அனுபவித்துள்ளனர். 

இதனை கருத்­திற்­கொண்டும், உணவு உற்­பத்­தியை அதி­க­ரிக்கும் முக­மா­கவும் எதிர்­வரும் 6ந் திகதி முதல் 11ந் திகதி வரைக்­கு­மான வாரத்தை உணவு உற்­பத்தி வார­மாக பிர­க­டனப்படுத்தவுள்ளேன்.  

ஆரம்ப நிகழ்வு மாத்­தளைப் பகு­தியில் தம்­புள்ளை பகுதியில் இடம்­பெ­ற­வுள்­ளது. எமது நாட்டு மக்­களின் நீண்­ட­கால வர­லாற்­றினைப் பின்­னோக்கினால் அது ஒரு போராட்ட வர­லாற்­றுக்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தி­ய­தா­கவே காணப்ப ட்டிருந்தது.

கால­ணித்­துவ ஆட்­சி­யா­ளர்கள், ஆங்­கி­லேயர் ஆட்சி, 30 வரு­டங்­க­ளுக்கு மே லான கொடூர யுத்தம், வறுமை, வரட்சி, வௌ்ளம் போன்ற இயற்கை சீற்றம் ஆகியவற்றைத் தெரிவித்துக்கொள்ளலாம். 

எமது மக்கள் போராட்­டங்­களை மேற்­கொண்டே வெற்றி பெற்றுள்ளனர். இனி மேல், இந்­நாட்டில் யுத்தம் ஏற்­பட வாய்ப்பே இல்லை. இந்­நாட்டில் வாழும் அனைத்து  இனங்­களைக் கொண்ட மக்­களும் நல்­லி­ணக்கம், சக­வாழ்வு ஆகி­ய­வற்றை முன்­னி­லைப்­ப­டுத்­தியே செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

தேசிய கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து செயற்படுகின்றனர். இதனால் சமூ­கங்­க­ளுக்­கி­டையில், இனங்­க­ளுக்­கி­டையில், அர­சியல் கட்­சி­க­ளுக்­கி­டையில் ஐக்­கியம், சக­வாழ்வு, நல்­லி­ணக்கம் மேலோங்கி காணப்பட்டுக்கொண்டிருக்கின்ற து. பதுளை மாவட்டம் என்­பது கமத்­தொழில், விவ­சாயம், பெருந்­தோட்டத் தொழில் துறை முதலியவற்றை முன்னிலைப்படுத்தியுள்ளது.  

இம் மாவட்­டத்தில் வாழ்ந்து வரும் மக்­களும் பெரும் வசதி படைத்­த­வர்­க­ளாக இல்லை.. மாவட்­டத்தில் பல்­வேறு குறை­பா­டுகள் மலிந்து காணப்­ப­டு­கின்­றன. இவற்றை தற்­போ­தைய அரசு சீரமைத்துக் கொண்டிருக்கின்றது. 

ஊவா மாகாண முத­ல­மைச்சர் சாமர சம்பத் தச­நா­யக்க பேசு­கையில், மத்­திய அர­சுடன் இணைந்த வகையில், ஊவா மாகாண சபை முன்னெடுத்துச் செல்கின்றது. 

இந் நாட்­டி­லேயே ஏனைய மாகாண சபை­களை விட ஆகக்­கூ­டு­த­லான அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை செயற்படுத்துகின்ற வகையில், ஆகக்­கூ­டு­த­லாக அரச நிய­ம­னங்­களை வழங்­கிய வகை­யிலும், எமது ஊவா மாகாண சபையே முன்­ன­னி­லை வகித்துள்ளது. 

இக்­கு­று­கிய காலத்­திற்குள் இரண்­டா­யிரம் பட்­ட­தா­ரி­க­ளுக்கு தொழில் வாய்ப்­புக்­களை வழங்கியுள்ளோம் என்றார். 

அமைச்சர் ஹரீன் பெர்ணன்டோ தமதுரையில், பதுளையில் அபிவிருத்தி குறித்து எதிர்நோக்கவோமானால்,
அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வாவினால் மட்டுமே நிறைவேறியுள்ளது.


ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, இராஜாங்க அமை ச்சர் டிலான் பெரேரா ஆகியோரும் பெரும் சேவைகளை செயற்படுத்தி யுள்ளனர். 




ஆனால், மேற்கூறப்பட்டவர்கள், நான் சார்ந்த கட்சியைச் சாராத விடயத்தி லும், அவர்கள் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையில், மக்கள் என்னை விமர்சனம் தொடுத்த வண்ணமே உள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது.