Breaking News

குற்றவாளிகளை செய்மதி மூலம் கண்டுபிடியுங்கள் - சுவிஸ்குமார்

வித்தியா படுகொலையின் சூத்திரதா ரியான சுவிஸ்குமார் தான் வித்தியா வின் படுகொலையுடன் ஈடுபடவி ல்லையெனவும், தான் குற்ற மற்ற வன்  கொலையாளிகளை செய்மதி மூலம் கண்டு பிடிக்குமாறும் நீதி மன்றில் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியா படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவ ர்களிடம், ஏன் உங்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கக்கூடாது? என நீதிபதிகள் சார்பில் கேட்கப்பட்டதற்கு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைவரும் ஒன்றிணைந்து தாம் கொலை செய்யவில்லையென மறுப்புத் தெரிவித்துள்ள னர். நாங்கள் குற்றவாளிகள் அல்ல எனவும் தெரிவித்தனர்.

முடிந்தால் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடியுங்கள். அத்துடன் செய்மதியின் உதவியுடன் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்குமாறும் எச்சரி த்துள்ளார்.

வித்தியா படுகொலை வழக்கில் 7பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கிய தீர்ப்பாயக் குழு ஏனைய
இருவரையும் விடுதலை செய்துள்ளது. அத்துடன், மரணதண்டனைக்கு மேலதிகமாக குற்றவாளிகள் வித்தியாவின் குடும்பத்திற்கு ஒரு மில்லியன் ரூபா பணம் வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் நிர்ப்பத்தித்துள்ளது.