Breaking News

இராணுவத்திடம் சரணடைந்த கணவரின் தகவல் தெரியும்வரை போராட்டம் தொடரும் !

இறுதிக்கட்டயுத்தத்தின்போது முள்ளி வாய்க்கால் பகுதியில் சரணடைந்த தமிழர்கள் தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டிய தேவை ஸ்ரீலங்கா அர சாங்கத்திற்கு அனுசரணை வழங்கிய நாடுகளுக்கு உள்ளதென வடமா காண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடை ந்த தனது கணவர் தொடர்பான தக வலை அரசாங்கம் வெளியிடும் வரை தனது போராட்டம் தொடரும் எனவும், தனது காலத்திற்கு பின்னர் தமது பிள்ளை அப் போராட்டத்தை தொடு ப்பதாகவும் அனந்தி சசிதரன் உறுதி யளித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதிக்க ட்ட யுத்தத்தின்போது தமிழீழ விடு தலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பா ளர் எழிலன் சரணடையவில்லை என்று ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்தன முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலை யில், ஊடகம்  ஒன்றிற்கு  வழங்கிய விசேட செவ்வியிலே வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இதனைத்  தெரிவித்துள்ளார்.