Breaking News

இலங்கை - தென்கொரிய ஜனாதிபதிகளிற்கு இடையேயான சந்திப்பில் !

தென்கொரியாவிற்கான உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவு க்கும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயினுக்குமிடையிலான உத்தியோ கபூர்வ சந்திப்பு இன்று இடம்பெற திட்டமிடப்பட்டிருந்த போதிலும், 


இலங்கை ஜனாதிபதி மீது தான் கொண்டுள்ள நன்மதிப்பினை வெளி ப்படுத்தும் வகையில் ஜனாதிபதியை நேற்று வரவேற்பதற்கான ஏற்பாடு களை தென்கொரிய ஜனாதிபதி முன்னெடுத்திருந்தார். 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மூன்று நாள் அரசமுறை விஜயத்தின் முதற்கட்டமாக சியோல் நகரில் அமைந்துள்ள ஜொக்யேசா புராதன பௌத்த விகாரையில் வழிபாடு செய்வதற்காக நேற்று பிற்பகல் அங்கு விஜயம் செய்த போது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் கொரிய ஜனாதிபதி யும் அங்கு வருகை தந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சினேகபூர்வ மாக வரவேற்றார்.

இத்தகைய விசேட வரவேற்பினைத் தனக்கு வழங்கியமைக்காக தென்கொ ரிய ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இந்த இதய பூர்வமான நட்புணர்வு தமது வாழ்வின் முக்கிய ஞாபகக்குறிப்பாக அமையுமெனக் குறிப்பிட்டார். தென்கொரிய ஜனாதி பதியின் இந்த செயலானது அவர் இல ங்கை மீதும் இலங்கை மக்களின் மீதும் கொண்டுள்ள நன்மதிப்பையும் தெளிவையும் உறுதி செய்கின்றது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். தன்னைப்போலவே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் கிராமத்திலிருந்து வந்த தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி பதவியை அடையும் வரையில் தாங்கள் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானதென்பதை நினைவு கூர்ந்த தென்கொரிய ஜனாதிபதி, இருவருமே தற்போது மக்கள் சேவையில் அர்ப்ப ணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையிலும் பல பொது விடங்கள் காணப்படுகின்றதெனக் குறி ப்பிட்ட தென்கொரிய ஜனாதிபதி, இரு நாடுகளுமே காலனித்துவ ஆட்சிக்கு ட்பட்டிருந்ததுடன் யுத்தத்திற்கும் முகங்கொடுத்து இறுதியில் ஜனநாயகத்தை நிலை நாட்டியுள்ளன எனத் தெரிவித்தார். 

யுத்த வெற்றியின் பின்னர் துரித அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்கும் அதே வேளை ஊழல், மோசடி என்பவற்றிற்கெதிராகச் செயற்படுவதாகவும் தென்கொரிய ஜனாதிபதி தெரிவித்தார்.

இத்தகைய பின்னணியில் இரு நாடு களுக்கிடையிலும் பல விசேட தொட ர்புகள் எதிர்காலத்தில் உருவாக்கப்ப டும் என்றும் தென்கொரிய ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

இரு அரச தலைவர்களுக்கும் ஆசீ ர்வாதம் வழங்கிய ஜொக்யேசா விகா ரையின் விகாராதிபதி சியோல் ஜியோங் தேரர், நேர்மையான அரச தலைவர்களாக இருநாட்டு ஜனாதிப திகளும் தமது நாட்டின் அபிவிருத்தி க்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகி ன்றனர் எனத் தெரிவித்தார்.

1913 ஆம் ஆண்டு அநகாரிக்க தர்மபாலவினால் ஜொக்யேசா விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்த பெருமானின் புனித தந்தத்தை வழிபடக் கிடைத்தமைக்கு ஜனாதிபதி இதன்போது மகிழ்ச்சி தெரிவித்தார்.

அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, திலக் மாரப்பன, தயாகமகே, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, தலதா அத்துகோரல, மலிக் சமரவிக்கிரம ஆகி யோரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.