Breaking News

மாவீரரை அஞ்சலிக்க அனுமதி கேட்டார் ஆர்னோல்ட்- சி.வி.கே சிவஞானம் மறுப்பு !

மாவீரர் தினத்திற்கென பிரத்தியேகமாக அஞ்சலி நிகழ்வுகள் ஒழுங்கமை க்கப்பட்ட நிலையில் வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வில் மாவீரர் தின அஞ்சலி நிகழ்வு வேண்டாமென அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். 

வடமாகாண சபையின் 110 அமர்வு இன்றைய தினம் (23) அவைத்தலை வர் சி.வி.கே. சிவஞானம் தலைமை யில் நடைபெற்ற அமர்வில் சபையை ஒத்தி வைக்க முற்பட்டவேளை வட மாகாணசபை உறுப்பினர் இ.ஆனோல்ட், மாவீரர் தினத்தினை முன்னிட்டு இன்றைய அமர்வில் அஞ்சலி நிகழ்வு ஒன்றினை நடத்துவதற்கு அவைத்தலைவரிடம் அனுமதி கோரியுள்ளார். எனினும், மாவீரர் தினத்திற்கென பிரத்தியேகமாக அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையினால் இன்றைய அமர்வில் மாவீரர் தின அஞ்சலி நிகழ்வுகள் வேண்டாமென அவைத்தலைவர் புன்ன கைத்தவாறு மறுத்துள்ளார்.