Breaking News

மரவள்ளித் தோட்டத்தில் 10அடி நீளமான மலைப்பாம்பு - வெளிகம்பொலவில் !

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெளிகம்பொல கிராமத்தில் பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பை  பிரதேசவாசிகள் பிடித்துள்ளனர். 

மரக்கறித் தோட்ட விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் மரவள்ளி கிழ ங்கு மரத்திற்கு நீர் பய்ச்சுவதற்கு இன்று (23) காலை சென்ற போதே மரத்தடியில் மலைப்பாம்பு காணப்ப ட்டுள்ளது. மலைப்பாம்பை கண்ட பிர தேசவாசிகள் அச்சம் கொண்டதுடன் பாம்பையும் மடக்கி பிடித்துள்ளனர். அண்மைக்காலமாக வளர்ப்பு நாய்கள் காணமல் போன நிலையிலே இந்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். பிடி க்கப்பட்ட மலைப் பாம்பை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ள தாக பிரதேவாசிகள் தெரிவித்துள்ளனர்.