Breaking News

வெகுவிரைவில் கோட்டாபய ராஜபக்ச சிறையில் சிக்குவார் !

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெகுவிரைவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளதாக அரச உயர்மட்ட தகவலை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்சவின் தந்தை டீ.ஏ ராஜபக்சவின் திருவுருவத்தை உருவாக்கவும்,  தொல்பொருள் காட்சியகம் நிர்மானி ப்பதற்கும் ஸ்ரீலங்கா கட்டிட நிர்மான மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபன த்திற்கு அனுமதி வழங்கியமையால் 90 மில்லியன் ரூபா நட்டத்தை அர சுக்கு ஏற்படுத்திய குற்றச்சாட்டு கோத்தபாய ராஜபக்ச மீது சுமத்தப்பட்டு ள்ளது. இவ் விவகாரத்தில் பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் சிலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ் வழ க்கு விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்வதற்கான உத்தரவை சட்டமா அதிபரும் வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட செய்தியில் தெரிவிக்கப்பெ ற்றுள்ளது.