Breaking News

மைத்திரியின் உயிருக்கு விபரீதம் ஆயுதங்கள் பல மீட்பாம் - இருவர் கைது!

கொழும்பை அண்மித்த பத்தரமுல்ல – கொஸ்வத்த பகுதியில் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நிகழ்வொன்று நடைபெற ஆயத்தமாகியுள்ளது. 
இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி வருகைதர முன்னர் வழமை போன்று ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் நிகழ்வு நடைபெறுகின்ற இடத்தை அண்மித்த பகுதியில் சோதனை நடவடிக்கை யில் ஈடுபட்டிருந்தனர். 

அவ்வேளை துப்பாக்கித் தோட்டா க்கள் 20, ஜப்பானில் தயாரிக்கப்பட்ட ரிவோ ல்டர், இரண்டு கஜமுத்துக்கள், வெளி நாட்டுக் கடவுச்சீட்டுக்கள் 4 என்பவற்றை பாதுகாப்பு பிரிவினர் கைப்ப ற்றியுள்ளனர்.  இச்சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரரர்கள் கைதாகி விசாரணைக்கள் முன்னெடுக்கப்பட்டு ள்ளன.  

இவர்கள் பத்தரமுல்ல – தலங்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறி ப்பிடத்தக்கது. இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை அவர் கலந்துகொண்ட நிகழ்வுகளுக்கு அண்மைய  நிகழ்வுகளிலும் ஆயுதங்களுடன் நடமாடிய நபர்களும், அண்மித்த பகுதிகளில் இருந்து ஆயுதங்கள் மீட்புச் செயற்பாடுகளும் பல சந்தர்ப்பங்களில் நடை பெற்றவாறு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.