Breaking News

படத்திலுள்ளதுபோல அடிக்கவில்லை பம்முகிறார் அருந்தவபாலன்(காணொளி)

நான் படத்திலுள்ளதுபோல மாகாணசபை
உறுப்பினர் சயந்தனை கெல்மெட்டால் அடிக்கவில்லை என கரணமடித்தார் அருந்தவபாலன்.

தன்னுடைய பாணியில் மீண்டும் தமிழரசுக்கட்சியிடம் சரணடைந்திருக்கிறார் அருந்தவபாலன். வேட்பாளர் பங்கீட்டின் போது கேசவன் சயந்தன் முறைகேடாக நடந்ததாக தெரிவித்து குற்றச்சாட்டினை முன்வைத்திருந்த தமிழரசுக்கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் அருந்தவபாலன் கேசவன் சயந்தனை கெல்மெற்றினால் தாக்கி தள்ளுகின்ற காட்சி காணொலியாக வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் இன்று பிற்பகல் ஊடகவியலாளர்களை சந்தித் அருந்தவபாலன் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்றும் சயந்தனை தாக்கும் நோக்கம் தனக்கு இல்லவே இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றார்.
காலாகாலமாக தமிழரசுக்கட்சியினை விமர்சித்து பின்னர் அவர்களிடம் சரணாகதி அரசியல் செய்து பழக்கப்பட்ட அருந்தவபாலனின் இந்த நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்ட ஒன்றென்பதோடு அடிதடி அரசியலில் இறங்கியமையால் சுமந்திரன் கட்சியைவிட்டு தன்னை தூக்கிவிடுவார் என்ற அச்சமும் இருக்கலாம் என்கின்றனர் கட்சி ஆதரவாளர்கள்.



தொடர்புடைய முன்னைய செய்தி