Breaking News

விளையாட்டாக தூக்கு போட்ட மாணவி கயிறு இறுகி உயிரிழப்பு - யாழில் சம்பவம்!

நுளம்பு வலையினை போட்டு தூங்கு ம்படி தாய் கண்டித்ததினால் விளை யாட்டாக தூக்கு போட்டது, விபரீத மான நிலையில் பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்ப வம் ஆனைக்கோட்டையில் சம்பவி த்துள்ளது. சோமசுந்தரம் வீதி ஆனை க்கோட்டை பகுதியினை சேர்ந்த சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயலும் 18 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

 தாயின் வாக்குமூலத்தின் பிரகாரம்.... 

வீட்டில் நுளம்பு பெருக்கம் அதிகம் உள்ளது. இதனால் கடந்த ஞாயிற்று க்கிழமை(10) இரவு மகள் படுக்கச் செல்ல முன்னர் நுளம்பு வலையினை போட்டு தூங்குமாறு கூறி கண்டித்தனான். மகள் கதவை பூட்டிவிட்டு தூங்கு வது வழமை. 

இரவு தம்பியும், தங்கையும் அக்கா எங்கே என கேட்டு கதவினை திறக்க முற்ப ட்ட போது உள்ளே தூக்கு போட்ட நிலையில் காணப்பட்டுள்ளார் என இறப்பு விசாரணையின் போது கூறியுள்ளார். உடனடியாக தூக்கில் இருந்து கழற்றி அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனு மதித்த போதும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இறப்பு விசாரணையினை என்.பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.