தோ்தலில் வாக்கு வேண்டுமா ? எமது பிள்ளைகளை தேடிப் பிடித்துத் தாருங்கள்!
தோ்தலில் வாக்கு வேண்டும் என்றால் எமது பிள்ளைகளை தேடி கண்டு பிடி த்து தாருங்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரி வித்துள்ளனா்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோ ரின் உறவுகளினால் முல்லைத்தீவில் கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி ஆரம்பி த்த போராட்டம் இன்று 20 ஆம் திக தியை கடந்துள்ள நிலையிலும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக 319 ஆவது நாளாக தொடர ப்பட்டவண்ணமுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த, இராணுவத்திடம் கையளித்த கைது செய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்க ப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெ டுக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நாளாந்தம் கண்ணீருடன் எமது பிள்ளைகளுக்காக வீதியில் காத்திருக்கின்றோம் என தெரிவிக்கும் உறவுகள் உங்களுக்கு தோ்தலில் வாக்கு வேண்டும் என்றால் எமது பிள்ளைகளை தேடி கண்டு பிடித்து தாரு ங்கள்.
நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கின்றோம் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.