Breaking News

தனியார் பேருந்தில் தீ; 19 பேர் காயம்!

தியதலாவ, கஹகொல்ல பகுதியில் தனியார் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிப்பு சம்பவத்தில் 19 பேர் காயமடைந்த நிலையில் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இச் சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் நடைபெற்றதாக இரா ணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த பேரூந்தில் திடீரென ஏற்பட்ட வெடிப்பையடுத்து பரவிய தீயில் சிக்கியே 19 பேரும் காயமடைந்துள்ள தாக பொலிஸ் விசாரணைகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இவ் அனர்த்தத்தில் 7 பேர் இராணுவத்தினர் எனவும் 5 பேர் விமா னப்படையைச் சேர்ந்தவர்களெனவும் 7 பேர் பொது மக்களனெவும் இரணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.