Breaking News

வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன்னர் கைது!!!

வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சற்றுமுன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 வட்டுவாகல் பகுதியில் கடந்த 22ஆம் திகதி மக்களின் காணிகளை கடற்ப டை முகாம் அமைப்பதற்காக அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் மேற்கொண்டமை தொட ர்பில் ரவிகரன் மற்றும் சிவாஜிலி ங்கம் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு விசார ணைக்காக அழைக்கபட்ட நிலையில் ரவிகரன் இன்றைய தினம் முல்லை த்தீவு பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியிருந்தார். இதன் போது ரவிகரனிடம் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.


அத்தோடு ஆர்ப்பாட்டம் நடாத்திய குற்றச்சாட்டில் சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அமரர் ஆன்டனி ஜெகநாதனின் மகன் பீற்றர் இளஞ்செழியனும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு ள்ளார்.